“ஆப்கானிஸ்தானை தலிபான்களிடம் இருந்து அந்நாட்டு இராணுவம் பாதுகாக்கட்டும்.” – வெளியேறுவது உறுதி என்கிறார் பைடன் !

தோஹாவில் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. ஆப்கன் அரசுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும், ஆப்கனிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படை மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட முடிவுகள் எட்டப்பட்டன.  இதனை தொடர்ந்து படிப்படியாக அமெரிக்கப்படைகள் வெளியேற ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்க படைகளுடன் இணைந்து போரிட்ட ஆப்கான் இராணுவ வீரர்களிடையே உயிர் தொடர்பான அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஆப்கான்வீரர்கள் வேறு நாடுகளுக்கு சென்று உயிர்பாதுகாப்பு பெற வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்கப் படை திரும்பப் பெறப்படும் என அதிபா் ஜோ பைடன் உறுதியாக  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் கூறியதாவது:
ஆப்கானில் தேசத்தைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க இராணுவம் அங்கு செல்லவில்லை. அந்த நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த ஆப்கான் தலைவா்கள் ஒன்றிணைந்து முயற்சிகளை எடுக்கவேண்டும். மேலும், ஆயிரக்கணக்கான அமெரிக்கா்களை ஆபத்தில் சிக்கவைக்க அமெரிக்கா விரும்பவில்லை.
தலிபான்களை நம்பவில்லை என்றபோதும், ஆப்கான் அரசை காக்கும் திறன் அந்நாட்டு இராணுவத்துக்கு உள்ளது என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, ஆப்கனில் அமெரிக்க ராணுவ நடவடிக்கை வரும் ஆகஸ்ட் 31-ம் திகதியுடன் முழுமையாக முடிவுக்கு வந்துவிடும் என்றார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *