“ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் கைதுகள் தொடரும்.”- நாடாளுமன்றில் அமைச்சர் சரத் வீரசேகர !

பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதால் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கைது செய்யப்படுவர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர் ,

எதிர்க்கட்சி தவறான தகவல்களை முன்வைத்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது என்றார்.

கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் ஒன்றுகூடுதல் மற்றும் ஆர்பாட்டங்களை நடத்துதல் என்பவற்றை தடை செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கமைய பொலிஸ்மா அதிபரால் அமுல்படுத்தப்படுகின்றது.

ஆர்பாட்டக்காரர்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவது அவர்களை சோதனைக்குட்படுத்துவது அல்லது வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவது ஆகியன பொதுச்சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்படுகின்றன; பொலிஸாரால் அல்ல.

அதன்படி பொதுச்சுகாதார பரிசோதகர்களின் உத்தரவுப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்படுவோர்  தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர் என அமைச்சர் மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *