“நான் வழங்கிய வீடுகளிலிருந்து மக்களை வெளியேற்ற அரசாங்கம் முயற்சி.” – சஜித் பிரேமதாச காட்டம் !

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக நான் முன்னதாக இருந்த காலத்தில் வழங்கப்பட்ட சட்டப்பூர்வமான வீடுகளிலிருந்து மக்களை வெளியேற்ற அரசாங்கம் தயாராகி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்களுக்கு எதிராக அரசாங்கத்தால் மேற்கொள்ளும் குறித்த திட்டத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து போராடும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் ரஜகம, சியத் லங்காகம, சிரிபரகம உள்ளிட்ட ஐந்து கிராமங்கள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் உருவாக்கப்பட்டது.

குறித்த கிராமங்களில் வசிக்கும் 213 குடும்பங்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றிக் குறித்த வீடுகள் மற்றும் காணிகளை ஆளும் கட்சி அரசாங்கம் தங்கள் நண்பர்களுக்கு விற்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரேமதாச தெரிவித்தார்.

பலவந்தமாக மக்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு பணிப்புரை விடுக்கும் சகல அரச அதிகாரி களுக்கு எதிராகவும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *