கிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்பு – நாளை முதல் அகழ்வுப் பணி !

கிளிநொச்சி – விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் இருப்பதை அவதானித்ததையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி குறித்த எச்சங்களை பார்வையிட்ட பின்னர் எச்சங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் மேற்கொண்டார்.

அதன்அடிப்படையில் மேலும் எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய குறித்த இடத்தில் நாளை முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *