“நாட்டை முழுமையாக ஏன் முடக்கவில்லை. ?- சுகாதார அமைச்சர் கெஹலிய பதில் !

இலங்கையில் கொரோனாத்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை , நள்ளிரவு ஊரடங்கு என்பவற்றை அரசு அமுல்படுத்தியுள்ளது. எனினும் இது தொடர்பில் நாட்டை மூடுமாறு பல தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டை முழுமயாக முடக்குவது தொடர்பில் குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ,

கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த போதிலும் அரசாங்கம் அதுதொடர்பில் நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே தீர்மானத்தை மேற்கொள்ளும்.” எனத்தெரிவித்துள்ளார்.

நாடு பல மாதங்கள் மூடப்பட்டதன் பின்னரே திறக்கப்பட்டது. சுமார் 15 இலட்சம் அரச ஊழியர்கள் கடைமையாற்றுகின்றனர். அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. எனினும் சுய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு நாளாந்த வருமானத்தை பெறுவோர் தொடர்பில் எவரும் வாய் திறப்பதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொவிட் தொற்றில் இருந்து மீள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதும், சுகாதார ஆலோசனைகளை கடைபிடிப்பதும் ஆகும் என்று தெரிவித்தார்.

உலகில் பலமிக்க பொருளாதார வல்லமை கொண்ட நாடுகள் கூட கொவிட் தொற்று காரணமாக ஆரம்பத்தில் நாட்டை மூடிய போதிலும் மீண்டும் நாட்டை திறந்ததனால் இந்த தொற்றை எதிர்கொள்ள நேரிட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *