நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு ஏழு மூளைகள் இல்லை. அவருக்கு ஒரு மூளையே உண்டு. பசிலின் மூளை, இங்கிருக்கும் அனைத்து மூளைகளை விடவும் சிறந்த மூளையாகும் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர்,
பசிலின் மூளை, இங்கிருக்கும் அனைத்து மூளைகளை விடவும் சிறந்த மூளையாகும். அந்த மூளை வெற்றிகரமானதும் தூர நோக்குடையதுமான மூளையாகும். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்னும் கட்சிக்கு எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி ஐந்தாண்டுகள் பூர்த்தியாகின்றன. இலங்கையின் பெரும் கட்சியாக தற்பொழுது உருவாகியுள்ளது.
இந்தக் கட்சியை இவ்வாறு உருவாக்கியதன் பெருமை பசில் ராஜபக்ஷவையே சாரும். 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த தீர்வுகளை அவர் வழங்குவார். இந்த வரவு செலவுத் திட்டம் மிகவும் வெற்றிகரமான ஒரு வரவு செலவுத் திட்டம் என்பதை நான் சபையில் பதிவு செய்கின்றேன் என ரோஹித அபேகுணவர்தன தெரி வித்துள்ளார்.