பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு வீச்சு – சந்தேகநபர் கைது !

பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் மீது நேற்றுமுன்தினம் (09.11.2021) பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷிலினி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தில் பம்பலப்பிட்டி, அதிமலே வீதியை சேர்ந்த ஹுசேமா அப்பாஸ் கென்போய் என்ற நபரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது வீட்டில் இருந்து இரண்டு பெற்றோல் குண்டுகளை கொண்டுவந்து பள்ளிவாசல் மீது வீசியுள்ளார். எனினும் சந்தேகநபரால் வீசப்பட்ட இரண்டு பெற்றோல் குண்டுகளும் வெடிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர் எவ்வித வாக்குமூலமும் வழங்கவில்லை என காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *