“மரண தண்டனை மட்டுமே எங்களை திருப்திப்படுத்தும்.” – இம்ரான்கானுக்கு மனோகணேசன் ட்வீட் !

பாக்கிஸ்தானில் இலங்கை பிரஜையை கொலை செய்தவர்களிற்கு அதிவேக சட்டநடவடிக்கை மூலம் உச்சபட்ச மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சியால்கோட்டில் இலங்கை நிர்வாக அதிகாரி பிரியந்த குமாரவை அடித்து, எரித்து, கொலை செய்த அடிப்படைவாத கும்பலுக்கு, குறிப்பிட்ட காலவரைக்குள், அதிவேக சட்ட நடவடிக்கை மூலம், உச்சபட்ச மரண தண்டனை வழங்கப்படுவதை தவிர எதுவும் எங்களை ஆறுதல் படுத்தாது மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் @ImranKhanP

என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *