“இலங்கையை உலகளாவிய கடல்சார் மையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் செயற்படுகின்றது.” – பிரதமர் மகிந்த

இலங்கையை பிராந்தியத்தில் நிலையான உலகளாவிய கடல்சார் மையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆசியா-பசிபிக் உலகப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்திய பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடான இலங்கை, அதன் மக்களையும் இந்தியப் பெருங்கடலையும் மதிக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளது எனவும் பிரதமர் இதன் போது தெரிவித்தார்.

“நீல பொருளாதாரத்தில் முதலீடு செய்தல்” என்ற கருப்பொருளின் கீழ் பிராந்திய ரீதியாக மையப்படுத்தப்பட்ட உலகப் பெருங்கடல் உச்சி மாநாடு ஆசிய-பசிபிக் மெய்நிகர் நிகழ்வு டிசம்பர் 6ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இடம்பெறுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *