“நாட்டின் பொருளாதாரம் திட்டமிட்ட மற்றும் ஆக்கபூர்வமான முறையில் முன்னேறும்.” – பிரதாமர் மகிந்த ராஜபக்ஷ

முழு அரச மற்றும் தனியார் துறைகளையும் உள்ளடக்கி நிலையான பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2022 வரவு -செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சு பொருளாதார மறுமலர்ச்சிக்கான தொடர்புடைய கொள்கைகளை உள்ளடக்கும். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும், நிலையான அபிவிருத்திச் சபையும் இது தொடர்பில் பொறுப்பான பணியை நிறைவேற்றுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். அனைத்துக் கொள்கைகளும் துல்லியமான தரவுகளின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமும் இந்த விடயத்தில் பெரும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டு நிறைவேற்றப்படவுள்ள விவசாயிகள் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தை 2023 ஆம் ஆண்டளவில் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் திட்டமிட்ட மற்றும் ஆக்கபூர்வமான முறையில் முன்னேறும் என அரசாங்கம் நம்புவதாகவும் பிரதமர் இதன் போது தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *