நாட்டின் பால் குடிக்கும் குழந்தைகளுக்கான பால் மா பொதியை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் இல்லாத நேரத்தில் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடு செல்ல டொலர்கள் எங்கிருந்து கிடைத்தது என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் டொலர்கள் இல்லை எனவும், அரசியல்வாதிகள் குடும்பத்துடன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கும், ஆலயங்களில் பூஜைகள் செய்வதற்கும் டொலர்கள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான இடது சாரி அரசாங்கங்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்களுக்குப் பரம்பரை பரம்பரையாகப் பசியும் பட்டினியும் மட்டுமே என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செய லாளர் மேலும் தெரிவித்தார்.