யாழ். நகரில் நடமாடும் கஞ்சா விற்பனை !

அணடமைய நாட்களில் வடக்கில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பாவனையும் – அவற்றை கடத்தும் நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. முக்கியமாக இளைஞர்களிடையேயும் – பாடசாலை மாணவர்களிடையேயும் இதனுடைய தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. பொலிசார் இது தொடர்பில் சில கைதுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும் கூட முழுமையாக இல்லாது ஒழிக்க எந்த விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தொடர்பில் அறிய முடிவதில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை  தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை வடக்கு பகுதிகளில் அதிகமாக வேண்டிய மேற்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

இந்த நிலையில், யாழ்.நகரில் நடமாடி கஞ்சா பொதிகளை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது  செய்துள்ளனர்,

சிறிய சிறிய பொதிகளாக, பொதி செய்து, நபர் ஒருவர் யாழ்.நகரில் நடமாடி விற்பனை செய்து வருவதாக, இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன், கஞ்சா பைக்கட்டுக்களையும் மீட்டுள்ளனர்.

சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *