இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்

cricket_pakisthan.jpgஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானின் நடத்தப்பட்ட தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாகக் கண்டித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல்கள் மனிதாபிமானமற்றவை. அவற்றை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் ஐ.நா.  தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பாகிஸ்தான் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் ஐ.நா. சபை கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை,  இத்தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் ஜப்பான் உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    இவர்கள் எப்போதும் ஆமை சிரித்த கதை போல் காலம் தாழ்த்திதான் சொல்வார்களா?? கண்டிப்பார்களா??

    Reply