அலி சப்ரியின் வெற்றிடத்துக்கு புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தன சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.
நிதியமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி இராஜினாமா செய்தமையை அடுத்து, குறித்த வெற்றிடத்திற்கு பந்துல குணவர்தன நியமிக்கப்படுவாரென தெரிவிக்கப்படுகிறது.
அலி சப்ரிக்கு முன்னர் பசில் ராஜபக்ச நிதியமைச்சராக இருந்ததோடு, அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி விலகியதை அடுத்து புதிய நிதியமைச்சராக அலி சப்ரி பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் வெற்றிடத்தில் உள்ள நிதி அமைச்சு பதவிக்கு பந்துல குணவர்தன நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.