அனுரகுமார பயணித்த வாகனத்தில் தலைக்கவசத்துடன் ஏறியவர் யார்..? – நாடாளுமன்றில் சூடுபிடித்த விவாதம் !

நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தமது வாகனத்தில் பயணித்தபோது, தலைக்கவசம் அணிந்தவாறு அந்த வாகனத்தில் ஒருவர் ஏறியமை குறித்து அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதன்போது கேள்வி எழுப்பினார்.

குறித்த  குற்றச்சாட்டு தொடர்பில் இன்று பாராளுமன்றில் இன்று பதிலளித்த ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார,

அந்த சந்தர்ப்பத்தில் எனது வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் மறித்தனர். கடந்த 10 , 15 வருடங்களுக்கு முன்னர் நான் கூறியதைதான் நீங்கள் இன்று கூறுகிறீர்கள் என நான் அவர்களிடம் கூறினேன். இந்த நாட்டில் பட்டப்பகலில் படுகொலைகள் நடந்தன. இன்று கொலைக்காரன் இல்லை. தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படவில்லை. இவையெல்லாம் நடக்கும் போது நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ. இன்று இந்த நேரத்தில் ஜனாதிபதி. எனவே அவரைப் பற்றிய அனுபவம் நமக்கு உண்டு.

எனவே, நாங்கள் தனக்குத்தானே எங்களது பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். நாங்கள் சுதந்திரமாக பாதையில் செல்கிறோம் என்று நினைக்கிறீர்களா? ஒவ்வொரு முறை நான் வாகனத்தில் செல்லும் போதும் எங்கள் கட்சித் தோழர்கள் பலர் சுற்றி இருந்து பாதுகாப்பு வழங்குகிறார்கள்.

நாங்களும் பாதுகாப்புடன் நடந்து கொள்கிறோம். பாராளுமன்றத்தை விட்டு வெளியேறும் முன் நான் வெளியே வருவதாக சகோதரர்களிடம் தெரிவித்தேன். உங்களில் சிலர் நில்லுங்கள். அதன்படி இருந்தனர். நான் நாளையும் அப்படியே செய்வேன். எமது உயிரை வீணாக விட முடியாது. வாகனத்தில் செல்லும் போது விபத்தை ஏற்படுத்தி எமது உயிரை பறிக்க இவர்கள் நினைக்கக்கூடும்.

அதனால் ஒரு சில மோட்டார் சைக்கிள்கள் எனது பாதுகாப்பிற்கு இருந்தது. தலைகவசத்துடன் ஒருவர் வந்து காரில் ஏறினார். அவர் எனது பாதுகாவலர். மழை காரணமாக அவரை எனது காரில் ஏற்றினேன். என பதிலளித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *