ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக எஸ்.வியாழேந்திரனும், கிராமிய வீதி அபிவிருத்திகள் இராஜாங்க அமைச்சராக பிள்ளையான் மற்றும் நெசவு கைத்தொழில், உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் நியமினம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் புதிதாக 24 இராஜாங்க அமைச்சர்கள் அரச தலைவர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.