கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பெரும் எண்ணிக்கையிலான பல்லைக்கழக மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டையில் இருந்து ஆரம்பமாகி, பஞ்சிகாவத்தை, புஞ்சி பொரள்ளை, பொரள்ளை வழியாக, பிரதமரின் இல்லம் அமைந்துள்ள விஜேராம நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, பிரதமரின் இல்லத்தை மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.