பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்புக்கு எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்பட இருக்கும் புதிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை இணையுமாறு இன்று காலை சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.
குறித்த கடிதத்திற்கு பதிலளித்த சஜித், கோட்டாபயவிடம் கூறிய முடிவில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அதே முடிவில் இனியும் நிலைத்து இருப்பார் எனவும் பதிலளித்துள்ளார்.
இதேவேளை, முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பிரதமருக்கு ஒத்துழைப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமருக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுட்டுள்ளார்.