வன்முறைகளை தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களில் தொலைக்காட்சி ஊடகவியலாளரும் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாரஹன்பிட்டியவை சேர்ந்த 39 வயது பெண் ஊடகவியலாளரே கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடையை சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.