யாழில் வாள்களுடன் முகமூடிக்கொள்ளை கும்பல் !

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் வாள்களுடன் வீடொன்றினுள் நுழைந்த முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது.
கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான 2 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வீட்டில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்ற நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை முகங்களை மறைத்தவாறு,வாளுகளுடன் வீட்டை உடைத்து உள்நுழைந்த கொள்ளை கும்பல், வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது.
அத்தோடு ஏனையவர்களை வாள் முனையில் அச்சுறுத்தி அவர்கள் அணிந்திருந்த 10 பவுண் நகைகளையும் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *