கௌதம் அதானிக்கு எதிராக இலங்கையில் பேராட்டம் !

முன்னாள் மின்சார சபை தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ  “அதானி குழுமத்துக்கு மன்னார் காற்றாலை தொடர்பான உரிமத்தை வழங்குமாறு மோடி கோட்டாபாய ராஜபக்சவுக்கு அழுத்தம் வழங்கியதாக தெரிவித்த கருத்து பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. குறித்த கருத்தை அதானி குழுமமும்,  ஜனாதிபதி கோட்டபாயராஜபக்ஸவும் மறுத்திருந்த நிலையில் மின்சார சபை தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ தனது பதவியையும் ராஜினாமா செய்திருந்தார்.

 

இந்த நிலையில், இந்திய அதானி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானிக்கு எதிராக பம்பலப்பிட்டியில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன் போது போராட்டக்காரர்கள் அதானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *