இலங்கை, சீன வங்கிகளிடம் இருந்து கடனைப் பெறுவதற்கு ஏற்பாடு – சீனத்ததூதரகம் !

கடன்களை வெற்றிகரமாகக் கையாள்வதற்கு சீன வங்கிகளிடம் இருந்து கடனைப் பெறுவதற்கும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீன தூதுவர் சி ஷென்ஹோனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, ​​இலங்கைக்கான சீனாவின் உதவிகள் பாரிய முதலீடாகவும் வர்த்தகமாகவும் தொடரும் என சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நடவடிக்கையாக சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளை இலங்கையில் தொடர்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த திட்டங்கள் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பிற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் எனவும் இரு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

சீனாவும் இலங்கையும் இணைந்து இலங்கையில் சுமார் 11,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாகவும் கொவிட் 19 உட்பட ஏனைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சீனத் தூதுவர் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பூங்கா போன்ற திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு இரு தரப்பினரும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் இலங்கைக்கு அதிகளவான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கையில் முதலீடு செய்ய விரும்பும் சீன மற்றும் உலக முதலீட்டாளர்களை பாதுகாக்க இலங்கை நடவடிக்கை எடுக்கும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *