நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையளித்தால் ஆறு மாதம், ஒரு வருடம், ஐந்து வருடத்தில் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என கூறும் எதிர்கட்சிகள் அந்த கால அவகாசத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்க மறுப்பது ஏன் ? என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர், ருவான் விஜயவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
தொழில் வல்லுநர்களுடன் இன்று (28ம் திகதி ) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ருவான் விஜயவர்த்தன இக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்று இன்னும் இரண்டு மாதங்கள் பூர்த்தியாகவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ருவான் விஜேவர்தன, இரண்டு வருடங்கள் சீரழிக்கப்பட்ட நாட்டை சில நாட்களிலேயே நாட்டை கட்டியெழுப்ப கூறுவது, இந்த நெருக்கடி சூழ்நிலையில் அரசியல் இலாபம் தேட முற்படுபவர்களே தவிர நாட்டை நேசிப்பவர்கள் அல்ல எனவும் சுட்டிகாட்டியுள்ளார்.
நாட்டை மீளவும் கட்டியெழுப்ப, முன்பிருந்த நிலைக்கு நாட்டை கொண்டு வருவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு குறிப்பிட்டளவு கால அவகாசத்தை வழங்க வேண்டும் என ருவான் விஜயவர்த்தன் கோரியுள்ளார்.