10 நாட்களில் 4000 கோடி ரூபா அச்சீடு – இனிமேல் பணம் அச்சடிக்க மாட்டோம் என்கிறார் ரணில் !

இலங்கையின் பணவீக்கத்தை தடுப்பதற்காக அடுத்தாண்டு தொடக்கம் பணம் அச்சிடப்படுவது நிறுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச்சில் 21.5 சதவீதம், ஏப்ரலில் 33.8 சதவீதம் என பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்து வரும் மாதங்களில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதனை நிவர்த்திக்கவென ரணில் விக்ரமசிங்க பிரதமராக பொறுப்பேற்ற பின்னரும், பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

…….

, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ரணில் அளித்த பேட்டியில், ‘‘அரசிடமும் பணம் இல்லை. மக்களிடமும் பணம் இல்லை. இதனால் எங்களுக்கு வேறு வழியில்லை. புதிதாக ஒரு லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளை அச்சிட உள்ளோம்.ரூபாய் நோட்டுகளை அச்சிட்டால்தான் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியும்.” என கூறிய ரணில் விக்கிரமசிங்க இன்று மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க கடந்த 10 நாட்களில் 4000 கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதாக திஸ் அத்தநாயக்க தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *