ஜப்பான் வழங்கும் ஆதரவுக்கு நன்றி – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி (Hideaki Mizukoshi) தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் கோட்டாபய ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையுடனான பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை தொடர்ந்து பேணுவதாகவும் ஹிடேகி மிசுகோஷி தெரிவித்தார். இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்தார்.

…..

 

இலங்கைக்கு சுதந்திரத்துக்கு பின்னரான கால அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஜப்பான் பாரிய அளவில் கைகொடுத்ததாகவும் எனினும் ராஜபக்ச அரசாங்கத்தின் தூரநோக்கற்ற வெளியுறவுக் கொள்கைகளால் ஜப்பானுடனான உறவு பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் அண்மையில் சாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *