எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சிகளோ சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டால் நெருக்கடிக்கு அவர்களே தீர்வுகளை வழங்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தினை தெரிவித்தார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வராமல் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது சாத்தியமில்லை. நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்தே ஆக வேண்டும்.
ஒப்பந்தம் செய்தாலே நம்மால் மீள முடியும். உண்மையிலேயே இது ஒரு கடினமான காலமாக இருக்கும் அதனை நான் இல்லை என்று சொல்ல மாட்டேன். முதல் 6 மாதங்களும் எமக்கு மிகவும் கடினமானதாக இருக்கும் ” எனக் குறிப்பிட்டார்