அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துமாறு இலங்கையிடம் IMF கோரிக்கை !

நாட்டின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் ரணில் தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் கடன்களால் மட்டுமே இலங்கையை மீட்க முடியும் என வலியுறுத்திவருகின்றது. எனினும் இலங்கையின் இடதுசாரிய அமைப்புக்களும் பொருளாதார வல்லுநர்களும் சர்வதேச நாணயநிதியத்தின் கடன்திட்டம் இலங்கையின் பொருளாதாரத்தை அடிமைப்படுத்தப்பட்டதாக்கி விடும் என எச்சரித்துவரும் நிலையில், அரசு தரப்பு இதனை கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை.
மேலும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ரணில் விக்கிரமசிங்க “கடினமானதாக இருந்தாலும் சர்வதேச நாணயநிதியத்தின் கடன்களை பெற்றே ஆகவேண்டியுள்ளது எனவும் இதனை யார் தடுத்தாலும் அரவ்களே நாட்டின் பொருளாதார நிலையை மீட்கட்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் , நட்டத்தில் இயங்கும் 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துமாறு IMF கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியில் இருந்து அரசுக்கு உதவி செய்ய முடியும். அரசாங்கத்தில் இணைந்து கொண்டுதான் அரசுக்கு உதவ வேண்டும் என்றில்லை என கருத்து தெரிவித்துள்ள லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி இலங்கையில் நட்டத்தில் இயங்கும் 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துமாறு IMF கோரிக்கை விடுத்துள்ளது இது தொடர்பில் நாம் பாராளுமன்றில் பேசி அரசுக்கு உதவி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *