பயணிகளின் பொதிகளை ஒப்படைக்க நடவடிக்கை

green-ocean.jpg
முல்லைத்தீவு,  புதுமாத்தளன் பகுதியிலிருந்து சிகிச்சைக்காக கப்பல் மூலம் புல்மோட்டைக்கு “கிறீன் ஓசன்’ கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டவர்கள் விட்டுச் சென்ற பொதிகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குச்சவெளி பிரதேச செயலாளர் உமாமகேஸ்வரன் தெரிவித்தார். புதுமாத்தளன் பகுதியிலிருந்து அவசர மேலதிக சிகிச்சைக்காக புல்மோட்டைக்கு “கிறீன் ஓசன்’ கப்பல் மூலம் வந்தவர்கள் சிலர் கைவிட்டுச் சென்ற பொதிகளை உரியவர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக குச்சவெளி பிரதேச செயலாளர் உமா மகேஸ்வரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; அவசர மேலதிக சிகிச்சைக்காக புதுமாத்தளன் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பல் மூலம் கடந்த 6 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை வந்தவர்களில் சிலர் பொதிகளை கைவிட்டு வவுனியாவுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், இவற்றை உரியவர்களிடம் கையளிக்கும் முகமாக இப்பொதிகளை வவுனியா அரச அதிபரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *