மறுபிரசுரங்கள்

மறுபிரசுரங்கள்

முடுக்கிவிடப்பட்டுள்ள இலங்கை அரசின் ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கை

மீண்டும் பதவிக்கு வந்துள்ள மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் அரசு திட்டமிட்ட முறையில் ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக சர்வதேச உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. அது தொடர்பான விரிவான கட்டுரை பிரித்தானியாவின் தேசிய நாளிதழான தி இன்டிபென்டனில் இன்று வெளியாகி உள்ளது.

._._._._._.

Sri Lankan government ‘settling scores’ in media crackdown : By Andrew Buncombe in Colombo

The newly re-elected government of Mahinda Rajapaksa has been accused of orchestrating a fresh crackdown on the media after a series of websites were blocked and at least one reporter detained after raising questions about the conduct of the election. One journalist is missing, one has been assaulted and others have received death threats.

In what campaigners claimed was a “settling of scores”, around half-a-dozen websites has been blocked and the offices of one of them sealed. A foreign journalist who had been ordered from the country after asking a question about the president’s brother was subsequently told she could stay after her case received international attention.

“Now that the president has been re-elected, there appears to be a settling of scores with critics of the government,” said Brad Adams, Asia director at Human Rights Watch (HRW). “Just days after the election, some officials seem to be on a campaign to abuse their power.”

While the Sri Lankan authorities have previously been accused of intimidating journalists, many observers have been surprised at the government’s actions following an election it won by 17 points. In the aftermath of his victory, Mr Rajapaksa vowed to reach out to all sections of Sri Lankan society and work for reconciliation in a country where the traumas of a three-decade long civil war remain fresh.

The government insists it is not attacking the media, only preventing the spread of what it termed defamatory rumours. A senior spokesman said: “Which country allows absolute freedom to websites or any arm of the media which gives publicity to socially corrosive and personally defamatory rumours that can also tend to destabilise the state.”

But HRW said it had detected a pattern of harassment. Five online media organisations have been blocked since the day before the election on January 26, while two days later, a group of armed men surrounded the offices of one of the outlets, Lanka e News, and sealed them. A regular contributor to the website, Prageeth Eknalogoda, who has a wife and child, has been missing since two days before the election.

A member of staff at Lanka e News said after their offices were sealed, staff received up to 40 phone calls in a hour “threatening us with death if we did not stop what we were doing”.

The previous day detectives arrested and questioned Chandana Sirimalwatte, editor of the Iridia Lanka newspaper. He has been detained, reportedly because of an article published on election day about a senior government official.

State media workers have also suffered. Ravi Abeywickrama, an employee at Sri Lanka Rupavahini Corporation, was attacked after signing a joint statement with 60 other employees that raised questions about the misuse of state media by Mr Rajapaksa’s campaign, an issue that was also raised by the country’s independent election commissioner, Dayananda Dissanayake, who said it had been overwhelming biased in favour of the president.

“This wave of post-election violence could cast a lasting stain on the start of President Rajapaksa’s second term and bodes ill for the political climate during the coming years,” said the media freedom group, Reporters Without Borders. “It is quite normal for journalists and privately-owned media to side with a candidate before and during a democratic election but it is unacceptable for them to the victims of reprisals once the elections are over.”

While it is Sri Lankan journalists who suffer the gravest dangers, international correspondents have also been harassed. Karin Wenger, a reporter with the Swiss Broadcasting Corporation (SBC) was ordered to leave the country after she asked a question about the role of Mr Rajapaksa’s brother, Basil Rajapaksa, in the campaign. This order was subsequently revoked and Ms Wenger informed there had been “a huge blunder”. Many foreign journalists were refused visas to cover the election.

Campaigners say in recent years at least 14 media workers have been killed and dozens more forced into exile. Among the most high profile cases was that of Lasantha Wickremetunge, editor of the Sunday Leader newspaper, which often criticised the government and who was murdered a year ago. No-one has been charged over his death. The government has denied any involvement in attacks on journalists.

Bob Dietz, of the Committee to Protect Journalists, based in New York, said: “Given the ugly history of attacks on journalists in Sri Lanka, we call on President Rajapaksa to ensure the safety of all journalists and to use his new mandate to reverse the repressive trends of the past several years.”

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக மஹிந்த சிந்தனை – 02

mahihda-cintanaya.jpgசில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனமாக மஹிந்த சிந்தனை 02ஐ வெளியிட்டார். அதில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த கருத்துக்கள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

மாகாண சபை

மாகாண சபை முறை சம்பந்தப்பட்ட தேர்தல் முறையையும் பிரதேச சபை மற்றும் மாவட்ட விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட கலப்பு முறையையும் உருவாக்குகின்ற முன்மொழிவொன்றையும் முன்வைக்கின்றேன். அதுவரை எவ்வித தாமதமுமின்றி 13 வது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையை மீண்டும் இயங்க வைப்பேன்.

வட மாகாணத்தின் நிலையான அபிவிருத்திக்காகவும் வடக்கு வாழ் மக்களின் வாழ்நிலையை மிக விரைவாக வளப்படுத்துவதற்குமாக செயற்படுத்தப்படுகின்ற வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தை மென்மேலும் பலப்படுத்தும் வகையில், மாகாண சபையில் மக்கள் பிரதிநிதிகளின் பூரண ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

செனற் சபை

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எவ்விதத்திலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாத வகையிலும் பாராளுமன்றத்தின் அதியுயர் தன்மைக்கு பாதகம் ஏற்படாத வகையிலும் மாகாண சபைகளில் நிறைவேற்றப்படுகின்றன நியதி ஆக்கங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்கள் என்பவற்றை மேலும் அர்த்தபுஷ்டியுடன் கலந்துரையாடுவதற்கும்,  மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் அவர்களை ஆக்கமுடன் பங்கேற்கும்படி செய்வதற்காகவும் மதத் தலைவர்கள், தொழில் வாண்மையாளர்கள் போன்ற நேரடியாக வாக்குகளால் தெரிவு செய்யப்படாத பிரதிநிதிகளும் பாராளுமன்ற செயற்பாடுகளில் பங்களிப்பை செய்வதற்கு ஏற்றவாறு சகல அரசியல் கட்சிகளினதும், அமைப்புகளினதும் கருத்துக்களை கோரியதன் பின்னர் இரண்டாவது மந்திரி சபையொன்றை நிறுவுவதற்கு உத்தேசித்துள்ளேன்.

தேசிய சகவாழ்வுக்கு புதியதொரு பாதை

பெரும்பாலானோரின் இணக்கப்பாடு என்பவற்றையே அதன் அடிப்படையாகக் கருதுகின்றேன்.

கிழக்கின் உதயம்

* பாணமவிலிருந்து புல்மோட்டை வரை கிழக்கு கரையோரப் பாதையையும் கந்தளாய் சேருவிலப் பாதையையும் அவசர அவசரமாக உருவாக்குகின்றோம். கிழக்கு மாகாணத்தில் எஞ்சியுள்ள அனைத்து நெடுஞ்சாலைகளையும் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்துநாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கிடையில் உள்ள பொருளாதார சமூக அரசியல் தொடர்புகளை மேம்படுத்துவேன்.

* மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வடமத்திய மாகாணத்துக்கும் கொழும்புக்கும் துரித போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு மரதங்கடவெல, பொலன்னறுவை, திருகோணமலைப் பாதைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் இறக்கண்டிப் பாலம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் யான் ஓய பாலம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துப் பாலங்களின் வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

* அம்பாறை மாவட்டத்தில் அறுகம்குடாப் பாலம் திறக்கப்பட்டுள்ளதோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடிப் பாலமும் புதிய கல்லடிப் பாலமும் மக்களுடைய உரிமைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசத்தில் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 59 புதிய நீர்வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பிரதான நீர்த்தாங்கிகள் 12 அமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

* புதிதாக 164 பாடசாலைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 327 கட்டடங்கள் புனரமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடசாலையும் நவீன விஞ்ஞான ஆய்வுகூடத்தையும் கணனி நிலையத்தையும் கொண்டதாக அமைக்கப்படுகின்றது.

* சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்காக வைத்தியசாலைகளுக்காக புதிதாக 55 வார்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. 445 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

* வாழ்வாதார அபிவிருத்திக்காக 80,000 ஏக்கர் வயல்கள் பயிரிடப்பட்டுள்ள அதேநேரம் 2500 வீட்டுத் தோட்டங்களும் 19 பழக் கிராமங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் தொடர்ந்தும் மேற்குறிப்பிட்ட பயிர்ச்செய்கையை மேம்படுத்தி புதிய சந்தை முறை ஒன்றை அறிமுகப்படுத்துவேன்.

* ஏற்றுமதி தயாரிப்புப் பிராந்தியம் ஒன்றை ஆரம்பிப்பேன்.

* வாழ்வாதார அபிவிருத்திக்காக புதிதாக 100,000 ஏக்கர் வயல்களின் பயிர் செய்ய வழி செய்வேன். 5,000 வீட்டுத் தோட்டங்களையும் 100 பழக் கிராமங்களையும் உருவாக்குவேன்.

* பால் உற்பத்தி செய்கின்ற தொழிலை மேம்படுத்துவதற்காக புதிதாக மூன்று மாதிரிப் பண்ணைகளை உருவாக்கியுள்துடன், பால் உற்பத்தி செய்கின்ற 100 கிராமங்களை அமைத்திருக்கிறேன்.

வடக்கின் வசந்தம்

* வடமாகாணத்தில் எந்த ஒரு இடத்துக்கும் சுதந்திரமாக போய்வருவதற்கு இருந்த தடைகளை நான் முழுமையாக நீக்கியுள்ளேன்.

* தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலைமைகளை கணக்கிலெடுத்து அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுப்பேன்.

* வடக்கில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம், மிளகாய் உட்பட்ட விவசாய உற்பத்திகளுக்கு இலகுவான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு, நாட்டில் ஏனைய பிரதேசங்களெங்கும் காணப்படும் பொருளாதார மையங்களுக்கு கொண்டு செல்வதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை சதொச ஊடாக ஏற்படுத்திக் கொடுப்பேன்.

* மதவாச்சி – மன்னார் பாதை, யாழ்ப்பாணம் – பருத்தித்துறைப் பாதை, யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஊடாக காரைநகர்ப் பாதை, முருங்கன் – சிலாபத் துறை, ஒட்டுசுட்டான் – நெடுங்கேணிப் பாதை மற்றும் வவுனியா – ஹொரவப்பொத்தான பாதை என்பவற்றை விரிவாக்கி அபிவிருத்தி செய்வேன்.

* யாழ்ப்பாணம் – கண்டி வீதி (ஏ-9), யாழ்ப்பாணம் – புத்தளம் வீதியை முன்னேற்றி அதிவேகப் பாதையாக மேம்படுத்துவேன்.

சங்குப்பிட்டிப் பாலத்தை உடனே அமைத்து யாழ்ப்பாணக் குடாநாட்டை மன்னார் மற்றும் புத்தளம் பிரதேசங்களோடு தொடர்புபடுத்துவேன். அத்துடன் யாழ்ப்பாணத் தீவுகளை மேம்படுத்தி நெடுஞ்சாலை முறைமையின் ஊடாக ஒன்றோடு ஒன்று இணைத்து யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் தொடர்புபடுத்துவேன்.

* யாழ். போதனா வைத்தியசாலையை முழுமையாக நவீனமயப்படுத்துவேன்.  அதற்கு இணையாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள வைத்தியசாலைகளையும் புனரமைப்பேன்.

* துரையப்பா விளையாட்டு மைதானத்தை நவீனமயப்படுத்துவேன்.

* சுதந்திரத்தின் அடையாள நகரமாக மாங்குளம் நகரத்தை அபிவிருத்தி செய்து மார்ச் மாதம் மக்களுக்கு உரித்தாக்குவேன்.

* யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு புதிதாக பொறியியல் பீடமொன்றை அமைத்துக் கொடுப்பேன். தொழில்நுட்பக் கல்லூரிக்கான விடுதி வசதிகளை விரிவாக்குவேன்.

* வடமாகாணத்தில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உயர் வருமானங்களுக்கு வகை செய்யக்கூடியதான நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பாரிய அரிசி ஆலைகள் இரண்டை நிறுவுவேன்.

* வடமாகாணத்தில் விவசாய எழுச்சிக்கு ஏற்புடையதாக விவசாய பீடம் ஒன்றை கிளிநொச்சி பிரதேசத்தில் நிறுவுவேன்.

* யாழ்ப்பாண மாவட்டத்துக்குத் தேவையான குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவதற்காக யாழ்ப்பாண நீர் வழங்கல் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்துவேன்.

* தலைமன்னார் – மதவாச்சி – ஓமந்தை புகையிரதப் பாதையை 2011 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வேன்.

2012 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை தெற்காசியாவில் அதிசிறந்த நகரமாக மாற்றுவேன்.

* கடந்த காலத்தில் விரும்பியோ விரும்பாமலோ தவறான வழியில் இட்டுச் செல்லப்பட்டு ஆயுதக் கலாசாரத்துக்குள் தமது வாழ்க்கையின் இளமைக் காலத்தைப் பறிகொடுத்துவிட்ட இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும், அவர்களின் சமூகக் கலாசார அடையாளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட புனர்வாழ்வுத் தராதரங்களின் அடிப்படையில் ஒரு வருட காலத்துக்குள் புனர்வாழ்வளித்து அவர்களது பெற்றோர்களிடம் கையளிப்பேன்.
வடக்கிலும் கிழக்கிலும் சகோதர மக்கள் மீண்டும் தத்தம் கிராமங்களுக்கு

‘வடக்கின் வசந்தம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள வவுனியாவின் நலன்புரி கிராமங்களில் இருந்த வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்குரிய அனைவரையும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பெருந் தொகையானோரையும் மீளக் குடியமர்த்தியுள்ளோம்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இன்னும் குடியமர்த்தப்பட வேண்டியவர்களாக உள்ளனர். நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்ற விரைவுக்கேற்ப அவர்கள் அனைவரையும் படிப்படியாக தாமதமின்றி குடியமர்த்துவேன்.

1990ம் ஆண்டு வட மாகாணத்திலிருந்து புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் அனைவரையும் அவர்களுடைய சொந்தப் பிரதேசத்தில் மீள் குடியேற்றம் செய்யக்கூடியதாக வீடமைப்பு, வாழ்வாதாரம், உட்பட சகல உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான விடயங்களில் உரிய கவனம் எடுக்கப்பட்டு முழுமையான கருத்திட்டம் வரையப்பட்டு அது அமுல் செய்யப்படும்.

வீடுகளைக் கட்டுவதற்கு
* மீளக்குடியமர்த்துகின்ற ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தற்காலிக வாழிடங்களை அமைத்துக் கொள்வதற்காக தற்போது வழங்கப்படுகின்ற 50,000 ரூபாவுக்கு மேலதிகமாக மேலும் 50,000 ரூபா பெறுமதியான பொருட்களையும் பெற்றுக் கொடுப்பேன்.

* சேதமடைந்துள்ள வீடுகளை மீள் அமைத்துக் கொள்வதற்காக 350,000 ரூபா பணத்தை நீண்டகால அடிப்படையின் கீழ் வழங்குவேன்.

* வீடுகளைத் திருத்துவதற்காக ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்குவேன்.

* ஒவ்வொரு வீட்டிற்கும் மலசலகூட வசதிகள் அமைத்துக் கொள்வதற்கு உதவிகள் வழங்குவேன்.

விவசாய ஊக்குவிப்பு
* சகல விவசாயக் குடும்பங்களுக்கும் தற்போது கொடுக்கப்பட்டு வருகின்ற விவசாய உபகரணங்கள், மீளக்குடியமர்த்தப்படும் சகல குடும்பங்களுக்கும் வழங்கப்படும்.

* சகல விவசாயக் குடும்பங்களுக்கும் தற்போது வழங்கப்படுகின்ற விதைநெல், உர வகைகள், ஒவ்வொரு போகத்தின் போதும் இலவசமாக வழங்கப்படும்.

* நெல் விவசாயிகள் சங்கம் ஒவ்வொன்றுக்கும் தண்ணீர்ப் பம்பி ஒன்றும் டிரக்டர் ஒன்றும் இலவசமாக வழங்கப்படும்.

மீன்பிடித் தொழில்
* ஒவ்வொரு மீனவத் தொழிலாளருக்கும் தேவையான மீன்பிடி உபகரணப் பொதி ஒன்று வழங்கப்படும்.

* மீன்வளத் திட்டமிடல் நிலையங்கள் இரண்டை மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நிறுவுவேன்.

கால்நடை அபிவிருத்தி
* கோழி வளர்ப்புக்கு தேவையான குஞ்சுகள் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் இலவசமாக வழங்குவேன்.

* பால் உற்பத்தியின் மேம்பாட்டுக்காக பால் உற்பத்தியாளர் கிராமங்களை நிறுவுவேன். பால் உற்பத்தித் தொழிற்சாலையொன்றை வவுனியாவில் ஆரம்பிப்பேன்.

* சுயதொழிலில் ஈடுபட விரும்பும் ஒவ்வொருவருக்கும் அதற்கு அவசியமான உபகரணப் பொதியொன்றை இலவசமாக வழங்குவேன்.

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து…  

ததேகூ உறுப்பினர்கள் நாடு திரும்பியதும் அறிக்கை சமர்ப்பிப்பு

tna-article-5.pngதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் நால்வர் இன்று புதுடில்லியில் இந்திய அரசுத் தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுகின்றனர். நாளை சென்னை திரும்புவர். மறுநாள் கொழும்பு திரும்பிய பின்னர் இந்திய பேச்சுக்கள் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடுவர் என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று முன்தினம் மாலையும்,ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று விடியற்காலையிலும் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனர். நேற்று புதன்கிழமை முன்னிரவு சென்னையிலிருந்து அவர்கள் நால்வரும் புதுடில்லி சென்றனர்.

இன்று புதுடில்லியில் இந்திய அரசுத் தலைவர்களையும் மூத்த அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்து இலங்கைத் தமிழர் நிலைமை, தற்போதைய இலங்கையின் அரசியல் போக்கு ஆகியவை குறித்துப் பேசுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று புதுடில்லி வெளிவிவகார அமைச்சின் ‘சவுத் புளொக்’ கில் பல தரப்பினரையும் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் நாளை காலையில் அவர்கள் சென்னை திரும்புவார்கள் என்றும் அதன் பின்னர் அடுத்த நாள் சனிக்கிழமை அவர்கள் கொழும்பு வருவார்கள் என்றும் கூறப்பட்டது.

தாம் கொழும்பு திரும்பிய பின்னர் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக இலங்கைத் தமிழ் மக்களுக்கு சில விடயங்களைத் தெளிவுபடுத்தி விளக்கும் வகையில் விரிவான அறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

 வீரகேசரி 1/14/2010

சிறிலங்காவில் வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழருக்கு அக்கறை குறைவு.: சுரேன் சுரேந்திரன்

Suren Surendiran (சுரேன் சுரேந்திரன் – பிரித்தானிய தமிழர் பேரவையின் முன்னால் தலைவர். தற்போது உலகத் தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர். பிரித்தானிய தேசிய நாளிதலான தி கார்டியன் பத்திரிகையில் http://www.guardian.co.uk/commentisfree/2010/jan/08/tamils-election-video-war-crimes  ஜனவரி 8ல் என்ற தலைப்பில் சுரேன் சுரேந்திரன் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.)

கடந்த வியாழக்கிழமை ஜ நா இன்  நீதிக்கு எதிரான படுகொலைக்கான சிறப்பு வல்லுனர் பிலிப் அல்ஸ்ரன் அவர்கள் பக்கசார்பற்ற சுதந்திர போர் குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஜனவரி மாதம் 2009 கைதிகளை சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்யும் போது எடுத்ததாக வெளியான காணொளி பதிவு உண்மையானது என அறிவித்திருந்தார்.

இந்த அறிக்கையை சிறீலங்கா அரசாங்கம் வழமை போல் உண்மையாது இல்லை என மறுத்துள்ளது. அத்துடன் அல்ஸ்ரன் அவர்கள் பக்கசார்பாக நடக்கின்றார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். எந்த விசாரணை என்றாலும் சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா மற்றும் முன்னை நாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இரண்டு முக்கிய வேட்பாளர்கள் உட்படுத்தப்பட வேண்டும்.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கா ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக செயல் பட்டதால் பகல்பொழுது சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவரை எவரும் இந்த கொலைக்காக தண்டிக்கப்படவில்லை. அத்துடன் இப்படுகொலையில் அரச தரப்பிற்க்கும் பங்குண்டு என சந்தேகிக்க படுகின்றது. ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று குறிப்பிட்டதுடன் கனடாவின் நசனல் போஸ்ற்க்கு அளித்த பேட்டியில் தான் சிறீலங்கா முற்றிலும் சிங்கள மக்களுக்கு சொந்தமானது ஆனால் அங்கே சிறுபான்மை மக்கள் இருக்கின்றார்கள் நாங்கள் அவர்களை எங்களுடைய மக்களாகவே கருதுகின்றோம். அவர்கள் எங்களுடன் இருக்கலாம் ஆனால் அவர்கள் தேவையில்லாத கோரிக்கைகள் வைக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். இக்கருத்து இனவாதத்தை தூண்டுவதாக பொதுவாக கருதப்படுகிறது.

மற்றவர்களுடன் சேர்த்து இவர்கள் இருவருமே  2006ம் ஆண்டு முதல் 2009 மே மாதம் வரை 80 000கும் மேற்பட்ட போரளிகளும் பொதுமக்களும் படுகொலை செய்ய காரணமானவர்கள்.

தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சியில் நடைபெறும் மனித உரிமை மீறல்களும், அரச விதிவிலக்கு நடைமுகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் வரிச்சலுகையை நிறுத்த உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளது. மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நீதிக்கு எதிரான படுகொலைகள் ஆட்கடத்தல்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. எட்டு வரையிலான ஊடகவியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமன்றி பல ஆயுத தாங்கிய ஒட்டுக்குழுக்கள் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னனியில் வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களின் வாக்கு சரிபாதியாக பிரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே தமிழ் மக்களின் வாக்கு பதிவுகளில் தான் வெற்றி தங்கியிருப்பதாக கருதப்படுகின்றது.

எனினும் 7 மாதங்களுக்கு முன்பு ஈடேறிய போரினால் தங்கள் சொந்த உறவுகளையும், நிலங்களையும்,  வீடு வாசல்களை இழந்த தமிழ் மக்கள் தேர்தலுக்கு தயாராக இல்லை. அவர்கள் இராணுவம்  மற்றும் ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழுக்களின் கண்காணிப்பின் கீழ் பயத்துடன் வாழ்கின்றனர். அத்துடன் மனித உரிமை மீறல்கள் சர்வசாதாரணமாக நடைபெறும் சூழலில் வாழ்கிறார்கள்.

1977 ஆம் ஆண்டு ஜனநாயக முறையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு சுதந்திரத்தனி நாட்டிற்கான கோரிக்கையை பெருமளவில் ஆதரித்து வாக்களித்தனர். ஆறாம் திருச்சட்டத்தை நடமுறைபடுத்தியதின் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட பேச்சு சுதந்திர சூழலில் கூட பல தேர்தல்களில் ஈடுபட்டுள்ளார்கள்.  அடக்கப்பட்ட பேச்சு உரிமையினால் கடும் வெறுப்படைந்த தமிழ் மக்கள் இதன் பின்பு இதுபோல் பல தேர்தல்களை மேற்கொண்டனர்.

இனப்பிரச்சினையின் தீர்வை கருத்தில் கொண்டு சுதந்திரம் கிடைத்து கடந்த 62 ஆண்டு காலமாக தமிழ் தலைவர்கள்  நல்லெணத்துடன் சிங்கள தலைவர்களுடன் பல ஒப்பந்தங்களில் கைசாத்திட்டுள்ளனர். இவ்வரிசையில் இறுதியாக சர்வதேச மட்டத்தில் கைச்சாத்திட்ட ஒப்பந்தம் 2002ம் ஆண்டு கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தம். இவ்வொந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களும் சிங்கள கட்சிகளால் ஒரு பட்சமாக நிராகரிக்கப்பட்டு கிழித்தெறியப்பட்டவை. தற்போது பொன்சேகா பிரதான தமிழ் கட்சியுடன் ஓர் ”ஒப்பந்தத்தில்” கைச்சாத்திட்டுள்ளார். இவ் ”ஒப்பந்ததில்” வடக்கு கிழக்கை ஒன்றினைப்பதாக கூறியுள்ளார் என்பது உத்தியோக பட்டற்ற செய்தி. முன்னைய ஒப்பந்தமான இந்தோ லங்கா ஒப்பந்தம் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் கூட தாமத்திக்காமல் சிங்கள இனவாத்தை தூண்டும் வகையில் தான் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான வடக்கு கிழக்கு ஒன்றிணைவதை ஒரு போதும் ஏற்க்க மாட்டேன் என அறிக்கை விட்டுள்ளார்.

”சரித்திரம் மீண்டும் திரும்புகிறதா என எண்ணத்தோன்றுகிறது.”

சில குறுகிய கால சலுகைகளுக்காக நல்லெண்ணத்துடன் தமிழ் தலைவர்களால் முன்னைய கால ஒப்பந்தங்கள் போல கைச்சாத்திடப்பட்டதே இவ்வொப்பந்தமும் ஆகும். தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவரின் விடுதலைக்காக போராடிய ஆபிரிக்க தேசிய அமைப்பின் (ANC) தலைவர்கள் சர்வதேச அழுத்தினால் சில குறுகிய கால சலுகைகளுக்காக தங்களுடைய நீண்டகால விடுதலை குறிக்கோள்களை அடைவு வைத்திருந்தார்கள் என்றால் இன்றும் தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவர் தங்கள் சொந்த நிலத்தில் இரண்டாம் தர பிரையைகளாக இருந்திருப்பர்.

மேலும் சந்தேகம் எழுகிறது இந்த புதிய ஒப்பந்ததில் சிங்கள இனத்திற்க்காக கையொப்பம் இட்ட சரத் பொன்சேகா தான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக கூறி உள்ளார் அச்சந்தர்ப்பத்தில் அவருக்கு இவ் ஒப்பந்ததை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விடும். மேலும் அவருடைய உத்தியோகபூர்வமான தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ் ஒப்பந்தத்தில் இருக்கும் பல கருத்துக்களை உள்ளடக்கவில்லை. அது மட்டும் அல்ல சரத் பொன்சேகாவை இத்தேர்தலில் பிரதான இரு சிங்கள கட்சிகள் ஆதரித்தாலும் ஒரு கட்சியே இவ் ஒப்பந்ததில் கைச்சாத்திட்டுள்ளது.

தற்போதைய தமிழ் தலைவர்களை தேசதுரோகிகள் என சரித்திரம் எடைபோடாது என்பதே பலரின் எதிர்பாப்பாகும்.

மக்ஸ் லேர்னர் சொன்னது போல “இரண்டு அரக்கர்களில் குறைவான கொடூரம் கொண்டவனை தேர்ந்தெடுக்கும் பொழுது மறக்க கூடாதது அவனும் ஒரு அரக்கன் என்பதை“.

துப்பாக்கி சூடு வீடியோ உண்மையானதுதான்: ஐ.நா. புலனாய்வாளர்கள்

lankashootingvideo.jpgஇலங் கையின் அரச படையினர் போன்ற சீருடை அணிந்தவர்கள், கைகள் கட்டப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட சிலரை சுட்டுக்கொல்வதுபோல சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த வீடியோ காட்சி உண்மையானவைதான் என ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஜனநாயகத்துக்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் என்னும் அமைப்பினாலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் காட்சி முதலில் அனைவருக்கும் அனுப்பட்டிருந்தது.  ஆரம்பம் முதலே இலங்கை அரசாங்கத் தரப்பினர் இந்த வீடியோ போலியானது என்று கூறிவருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்த ஐ.நா.வின் சிறப்பு நிபுணர்கள், இந்த வீடியோ குறித்த அனைத்து சந்தேகங்களையும் களைந்துவிட்டதாக சட்டத்துக்கு புறம்பான, எதேச்சதிகார மற்றும் விசாரணையற்ற கொலைகள் குறித்த ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் பிலிப் அல்ஸ்டன் கூறியுள்ளார்.  இலங்கை அரசாங்கத்தால் இந்த வீடியோ குறித்து ஆராயுமாறு நியமிக்கப்பட்ட குழுவின் முடிவுகளில் குறை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டனவா என்பது குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா.வின் சிறப்புத் தூதர் தெரிவித்துள்ளார்.  ஆனால் இந்த வீடியோ விடுதலைப் புலிகளின் பிரச்சாரமே என பிரிட்டனுக்கான இலங்கையின் தூதுவர் ஜஸ்டிஸ் நிஹால் ஜயசிங்க கூறியுள்ளார்.

BBC

ஜிஹாத், அல்பத்தாஹ், புலிகள், சங்கிலியன் படை. : யஹியா வாஸித்

Mosque_Bomb_Blast_Mar_2009புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் மட்டுமல்ல, புலிகள் சார்பான புத்தி ஜீவிகள் கூட இன்னும், இன்றும் முஸ்லீம்களை இரண்டாம் கண்கொண்டே பார்க்கின்றனர். அதிலும் கிழக்கில் முஸ்லீம்களையும், தமிழர்களையும் எவ்வாறு மோதவிடலாம் என்பதில் கண்ணும் கருத்துமாகவே உள்ளனர். அண்மையில் சகோதரர் பக்ஷீர் எழுதிய ஒரு கட்டுரையில் புலிகள் இறந்த பாறூக்குக்கு எவ்வாறு பட்டுக்குஞ்சம் கட்டி, பட்டுத்தாம்பரம் விரித்தனர் என எழுதியிருந்தார். யார் இந்த பாறூக், யார் அந்த மொகமட் ஹாசீம் மொகமட் றாபி என்பதை பார்க்க முதல், 1983 க்கு முந்தைய கிழக்கு மாகாணம் எப்படி இருந்தது என்பதை சற்று பார்ப்போம்.

1960,1970,1980 காலகட்டங்களில் கிட்டத்தட்ட மொத்த கிழக்கு மாகாணத்தவனும் படிக்காத முட்டாளாகவே இருந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள், ஆங்காங்கே மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, வயல்வெளிகளுக்குள் குட்டிக்குட்டி தேனீர்கடைகள், நீண்ட நெடிய ஆறுகள், இடுப்பளவு தண்ணீருடன் குளங்கள், நாள்சந்தைகள், வாரச்சந்தைகள், துடிக்கத் துடிக்க கடல் மீன்களை கூறு போட்டு விற்கும் மீன் சந்தைகள், வீடுகள், பாடசாலைகள், கோயில்கள், தீர்த்தோற்சவங்கள், தீமிதிப்புகள், பெருநாட்கள், விளையாட்டுப் போட்டிகள்.

நாங்கள் வயலுக்கு பைசிக்கிளில் அதிகாலை போய்கொண்டிருப்போம். வழியில் தமிழ் சகோதரர் ஒருவர் மீன் வண்டியுடன் வந்து கொண்டிருப்பார். எங்களை கண்டதும் காக்கா நல்ல விரால் மீன் இருக்கு காக்கா வாங்கலையா என்பார். நான் வயலுக்கு போறன். வீட்ட பொண்டாட்டி இருப்பா நல்ல விரால் மீனாகப் பார்த்து ஒரு நாலு விரால் கொடு. நாளை பணம் தருகின்றேன் என சொல்லி விட்டு நாங்கள் வயலுக்கு செல்வோம். எஸ் வீ ஓல்ஆர் பிறதர்ஸ்.

புட் போல் மெச். ஒன்று யங்ஸ்டார். சித்திரவேல், நடராஜா, சின்னவன், போளையன், சங்கர், மூர்த்தி, தவராஜா என தமிழ் சகோதரர்களின் ரீம். ஆதம்பாவா, சீனிக்காக்கா, பாறூக், அஸீஸ், ஜமால், வட்டானை என முஸ்லீம் சகோதரர்களை கொண்ட ரீம். இரண்டு ரீம்காறர்களும் வெலிங்டன் தியேட்டர் அருகில் சந்தித்து அடுத்த வாரம் மோதுவதாக முடிவெடுப்பார்கள். செய்தி காட்டுத் தீயாக ஊர் முழுக்க றெக்கை கட்டிப் பறக்கும். தமிழ் பகுதிகளில் அடுத்தவாரம், காக்காமாருக்கு இருக்குது அடி எனவும், முஸ்லீம் பகுதிகளில் வாற வெள்ளிக் கிழமை தமிழனுக்கு இருக்குது குறுமா எனவும் இளைஞர்கள் பேசிக் கொள்வார்கள். மரவெட்டான் குளம் ( எழுதுமட்டுவான் மைதானம் ) வெள்ளிக் கிழமை தமிழ் முஸ்லீம் இளைஞர்களால் நிரம்பி வழியும். மச்சான் நடராஜா, பின்னால சீனிக்காக்கா வாறான் கவனம் மச்சான் என தமிழ் இளைஞர்களும், சீனிக்காக்கோவ் கோணர் கிக் ஒண்டு கொடுங்கோ சீனிக்காக்கா என முஸ்லீம் இளைஞர்களும் குரல் கொடுப்பார்கள். ஆம் யுத்தம், தர்ம யுத்தம் நடக்கும். இறுதியில் தமிழ் இளைஞர்கள் வென்று விடுவார்கள். முஸ்லீம் இளைஞர்கள் வெடி கொழுத்துவார்கள். பக்கத்தில் உள்ள யாசீன் காக்காட சினிமா தியேட்டரில் அனைவரும் ஒன்றாக 6.30 படம் பார்த்து, அடுத்தவாரம் தர்மசங்கரி மைதானத்தில மோதுவோம் மச்சான் என புறப்படுவார்கள். எஸ் வீ ஓல்ஆர் கசின்.

வீடு கட்ட வேண்டும். புது வீடுகட்ட நிலம் பார்க்க, நிலக்கால் நாட்ட தமிழ் சாத்திரிமாருக்கிட்டத்தான் அத்தனை காக்காமாரும் போவார்கள். கிழக்குமாணத்தில் உள்ள 90 வீதமான முஸ்லீம்களின் வீடுகள் 1983க்கு முதல் தமிழ் சகோதரர்களால்தான் கட்டப்பட்டது. அவ்வளவு நேர்த்தி, அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் இருந்து தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உதவுவது போல் செய்வார்கள். எஸ் வீ ஓல் ஆர் சேம் பிளட்.

ஆம் தமிழ் முஸ்லீம் இனக்கலவரங்கள் வரும். கல்முனை காக்காமாருக்கும், நற்பிட்டிமுனை தமிழ் சகோதரர்களுக்கும், அக்கரைப்பற்று காக்காமாருக்கும், பனங்காடு, கோளாவில் தமிழ் சகோதரர்களுக்கும், காத்தான்குடி காக்காமாருக்கும், ஆரப்பத்தை தமிழ் சகோதரர்களுக்குமிடையில் இரண்டு வருடத்துக்கொரு முறை இனக்கலவரம் வரும். இது திட்டமிட்ட புத்திஜீவிகளால் உருவாக்கப்படும் இனக்கலவரம் அல்ல. நேற்று இரவு தென்னங்கள்ளையோ அல்லது வடிசாராயத்தையோ அருந்தியவர்களால் உருவான இனக்கலவரம். முதல்நாள் இரண்டு பகுதியிலும் இரண்டு பேரின் செவியை (காது) அறுப்பார்கள்.. அடுத்தநாள் இரண்டு பகுதியிலும் கொஞ்சம் சோடா போத்தல் பறக்கும். மூன்றாம் நாள் அப்பகுதி பொலீஸ் அதிகாரி இருபகுதியிலும் கோயில் தலைவர்கள், பள்ளிவாசல் தலைவர்களை அழைத்து. ஓகே. இன்றிலிருந்து சமாதானம் சரியா என்பார். இருதரப்பாரும் தலையாட்டுவர். பகல் ஒரு மணிபோல் போலீஸ் வண்டியில் ஸ்பீக்கர் கட்டி. சரி இருதரப்பும் சமாதானம் ஆகிவிட்டது. நாளை கடை திறக்கலாம், பாடசாலைக்குப் போகலாம், எல்லாம் வழமை போல் இயங்கும் என்பார்கள். டண். இரண்டு பகுதியிலும் போத்தல் எறிந்த குறுப்புகள் அன்று பின்னேரமே சாறாட ( சிங்கள சகோதரர் ) கொட்டிலில் சோமபானம் அருந்திக் கொண்டிருப்பர். எஸ் வீ ஓல் ஆர் சக்களத்திகள்.

இந்த சக்களத்தி சண்டைகளையும், நண்பர்கள் சண்டையையும். மச்சான் மச்சினன் சண்டையையும் ஊதிப்பெருப்பித்த புண்ணியம் கிழக்கு மாகாணத்தில் 1979ல் வீசிய புயல், வெள்ளத்தையே சாரும். அன்று கிழக்கில் மருதமுனை, நீலாவணை, சின்னக்கல்லாறு, பெரிய கல்லாறு, ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, பெரிய போரதீவு, கோயில் போரதீவு போன்ற இடங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டது. இப்பகுதி முழுக்க முழுக்க தமிழ் சகோதர, சகோதரிகள் வாழும் பகுதிகள். உடனடியாக அன்று பிற்பகலே பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையுள்ள முஸ்லீம் இளைஞர்கள் புஸ்பைக்கிலிலும், கால்நடையாகவும் சென்று அவர்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்தார்கள்.. செய்தோம். ( இப்போதும் வன்னி புனிதர்களுக்கு, சட்டி பானையுடன் ஓடிப்போய் முதல் சோறு போட்டவனும் இந்த காத்தான்குடி சோனிகள்தான். திஸ் இஸ் இஸ்லாம். வட் ஹெப்பன் ரு வணங்கா மண். தற் இஸ் பக்கா கெப்பிற்றலிஷம். தற்ஸ் வை ரூ லேட் போர் எவ்ரிதிங் ) அப்போது, ஒருவாரத்தின் பின் யாழ்ப்பாணத்திலிருந்து பல இளைஞர்கள் இவர்களுக்கு உதவி செய்கின்றொம் பேர்வழி எனக்கூறிக் கொண்டு வந்து, உதவியுடன் உபத்திரவத்துக்கும் பிள்ளையார் சுழிபோட்டார்கள்.

அடியாத மாடு படியாது, அடி உதவுகின்றாப் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான், யாமிருக்கப் பயமேன் என ஆரம்பித்து, எங்களை, ஒன்றாக, ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த எங்களை, கொத்தி கூறு போட்டு, கொத்து பராட்டா போட்டு, கொக்கரித்து, கொந்தளிக்க வைத்து, டேய் காக்கா வாறான், காக்கா வாறான் கதையை நிற்பாட்டு, ஏதோ றெக்கி எடுக்கத்தான் வாறான் என்ற அளவுக்கு எங்கள் நண்பர்களை, எங்களுடன் வாழ்ந்தவர்களை, எங்களுடன் ஒன்றாக உறங்கியவர்களை கிள்ளி தொட்டிலையும் ஆட்டி, திரும்பவும் ஆட்ட நினைக்கின்றீர்களே, இது தகுமா, இது தருமமா. கோவலனை கண்ணகி மாதவி விடயத்தில் மன்னிக்கவில்லையா, நடுக்காட்டில் தன்னை விட்டு விட்டு ஓடிய நளனை தமயந்தி மன்னிக்கவில்லையா, தன்னை வைத்து சூதாடிய அயோக்கியன் தருமனை பாஞ்ஞாலி என்ற பதிவிரதை மன்னிக்கவில்லையா. பிளீஸ் எங்களை கொஞ்சம் பழையபடி சேர்ந்து வாழத்தான் விடுங்களேன். வீ ஆர் ஸ்ரில் திங்கிங் எபவுட் அவர் ஓல்ட் கல்ச்சர்.

1981இல் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாறூக். வீட்டில் தனது குடும்பத்தாருடன் ஏற்பட்ட சிறு பிரச்சனையில் மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் அலைந்து திரிந்தார். அச்சமயங்களில் இவர் யாழ்பாணத்திலுள்ள டவுண் பள்ளி வாசலில்தான் ( இப்போதைய ஈபிஆர்எல்எப் ஒபீஸ் அருகில் உள்ள பள்ளி வாசல் ) தங்கினார். ஒரு சில நாட்கள் சுபாஸ்கபேயில் வேலையும் செய்தார். பின்னர் யாழ் பஸ் நிலையத்தில் ஒரு கூவி விற்கும் வியாபாரியுடன் சேர்ந்து சிறு சிறு வியாபாரம் செய்தார். 1982 கடைசியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில ஈபிஆர்எல்எப் முஸ்லீம் இளைஞர்களின் துணையுடன் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பள்ளியில் தங்கியிருந்தார். அப்போது இவர் ஈபிஆர்எல்எப் இல் இணைய முயற்சி செய்தார். இவரது நடவடிக்கைகள் சிறப்பாக இல்லாததால் அவரை இணைத்துக் கொள்ளவில்லை. பின்னர் அவர் ஐந்து சந்தியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வேலை செய்தார்.

அதன் பின் இவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும், புலிகள் இயக்கத்தவருமான கெப்டன் நரேஷ் ( இவர் இப்போது இங்கிலாந்தில் இருக்கின்றார் ) அவர்களூடாக 1984 முற்பகுதியில் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார் அல்லது இணைக்கப்பட்டார். இவரது வேகமான வளர்ச்சி, இறைச்சிக்கடை அனுபவம் புலிகளை மலைக்க வைத்தது. இவரது வெட்டுக்குத்துகளைப் பார்த்த கிட்டண்ணா இவரை தனது மெய்பாதுகாவலராக இணைத்துக் கொண்டார். ஒருசில நேரங்களில் இவரது வளர்ச்சியில் லெப்.கேணல்.ராதாவுக்கு, வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிடுமோ என்ற ஒரு மன உளர்ச்சி, தளர்ச்சி இருந்தது. ஆம் அது 07-01-1987ல் சிங்கள கூலிப்படை கொன்றது என்ற பெயரில் பிற்பகல் 5.55க்கு கே.கே.எஸ்.வீதியில் ராதா தலைமையில் அரங்கேறியது. அக்கரைப்பற்று ( அக்கு, ஆர், அரை, பற்று )பெற்றெடுத்த ஒரு மறவன் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தானடா, கர்ணா எய்தவன் கர்ணனடா, கர்ணா எய்தவன் ராதாவடா. இது பாறூக்கின் சரித்திரத்தில் ஒரு துளி.

முகமட் ஹாசீம் முகமட் ராபி, இவர் அட்வகேட் ஹாசீம் பி.எஸ்சி (இந்தியா) அவர்களின் இரண்டாவது மகன். கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் ( அமைச்சர், எம்பி )பேரன். இவர் அக்ரைப்பற்று சென்றல் கொலேஜ்ஜில் ஓஎல் வரை படித்து, ஏஎல் யாழ். மகஜனாவில் படித்தவர். 1983 ஆரம்பத்தில் பரீட்சை முடிவை எதிர்பார்த்து அக்கரைப்பற்றில் இருந்தார். அப்போது 1983 ஜூலை கலவரம் வெடித்து, குட்டிமணி, தங்கத்துரை எல்லாம் பனாகொடையில் கொல்லப்பட, தமிழ் சிறைக்கைதிகளை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். மட்டக்களப்பு சிறையுடைப்புக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட, அக்கரைப்பற்றில் உள்ள முஸ்லீம் இளைஞர்களும், தமிழ் இளைஞர்களும் சேர்ந்து 1983 செப்டம்பரில் திருக்கோவில், தம்பிலுவில் கிராமங்களில் பொதுமக்களின் ஆயுதங்களை கொள்ளையிட்டார்கள். சிலதை உரிமையாளர்களின் ஒப்புதலுடன் பெற்றார்கள்.

அப்போது, முஸ்லீம் இளைஞர்கள் இந்த மொகமட் ராபியையும் அந்நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தார்கள். முகமட் ராபி பங்கு பற்றிய முதல் நிகழ்வு இது. அதன் பின் இவர் பல முறை ஈபிஆர்எலஎப் இல் இணைய முயற்சித்தார். அப்போது இந்திய அரசும், இந்திய ரோவும் இணைந்து தமிழ் அமைப்புகளுக்கு பயிற்சி வழங்க முன் வந்திருந்தது. இச்செய்தி பத்மநாபா ஊடாக முதல் முதலில் கிழக்கு மாகாணத்துக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக அடுத்த வாரமே கிழக்கு மாகாணத்தில் இருந்து 67 இளைஞர்கள் அனுப்பப்பட்டார்கள். இதில் இந்த முகமட் ராபியும் ஒருவர். இவர் ஒருவர்தான் முஸ்லீம் இளைஞர். யாழ்ப்பாணத்தில் ஈபிஆர்எல்எப்புக்கு அப்போது பொறுப்பாக இருந்த தோழர்கள் அவரை மட்டும் திருப்பி அனுப்பிவிட்டு, மற்றவர்களை மயிலிட்டி ஊடாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆம் தடங்கல் அப்போதே ஆரம்பித்து விட்டது. என்றாலும் அப்போது ஈபிஆர்எல்எப்பில் கிழக்கு மாகாணத்தில் எடுபிடியாக இருந்த ஒருவரின் ( எல்லா இயக்கங்களுமே முஸ்லீம்களை எடுபிடியாகத்தான் பாவித்தார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம் ) நச்சரிப்பில், அவரே நேரடியாக யாழ். வந்து தோழர்களை உண்டு இல்லை என பண்ணி, முகமட் ராபியை மயிலிட்டியில் படகில் ஏற்றிக்கொண்டு வேதாராண்யம் ஊடாக மெட்ராஸ் சூழைமேடுவரை வந்து ராபியை, நாபாவின் ஆசீர்வாதத்துடன் உத்தரப்பிரதேசம் அனுப்பி வைத்தார்.

1984 பெப்ரவரிக்குப் பின் கிழக்கு கிழக்காக இல்லை. தடி எடுத்தவன், தண்ணி அடித்தவன், மச்சான் போட்டு பேசியவன், படலைக்குள் புகுந்து மையிறு புடுங்கியவர்கள் எல்லோரும் தடியுடன் இருந்தார்கள். இது கொஞ்சம் வித்தியாசமான தடி. இவனை பார்த்தால் கோழிக் கள்ளன் போல் இருக்கின்றான் மச்சான். போடு, போடு போட்டுத்தள்ளு என போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள், சகோதரர்கள், ஒன்றாக எங்களை செக்கண் சோவுக்கு அழைத்துச் சென்றவர்கள், வா மச்சான், வாடா காக்கா என அன்பாக அழைத்த நண்பர்கள். வாடா காக்கா என, அடிநாக்கு நாசியையும், தொண்டையையும் ஒட்டுற மாதிரி அழைத்தார்கள். அதில் அன்பில்லை. ஆக்ரோஷம் இருந்தது. பள்ளி வாசல்கள், கடைத்தொகுதிகள், வயல்வெளிகள் எல்லாமே அழிந்து போயின. ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போல் இருந்த நாங்கள், ஒருவரை ஒருவர் பார்க்க வெட்கப்பட்டோம். வேதனைப்பட்டோம். கையில் தடி வைத்திருந்தவர்கள் தவிர, மற்ற அனைத்து சோனிகளும், தமிழனும் வாழ்வாதாரத்துக்கு கஸ்டப்பட்டார்கள். கஸ்டப்பட்டோம். கூலித்தொழிலாழிகள் ஒரு வேளை உணவுக்கு அல்லாடினர்.

இதில் இரு பகுதியினரையும் குறை சொல்ல வேண்டியுள்ளது. தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இருந்து திட்டமிட்டு செய்தார்கள். மூஸ்லீம் இளைஞர்கள் எவ்வித ஆயுதமயப்படுத்தலுமின்றி கூட்டம், கூட்டமாக சென்று சில அநாகரிக செயல்களை அரங்கேற்றினர். இதற்கு அரசும் பின்னால் நின்று நெய்யூற்றியது. இவற்றின் உச்சக்கட்டம்தான் சிறிலங்காவில் ஜிஹாத் அமைப்பு தோன்ற வழி வகுத்தது. ஆம் 1984 ஜூன் 17ல் ஜிஹாத் உருவானது. முழு சிறிலங்காவிலுமிருந்து 40 நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புடன் அது தொடங்கியது. காலி கோட்டை, வேருவளை தொடங்கி யாழ். நயினாதீவு வரையுள்ள மனிதாபிமானிகளின் உளப்பூர்வமான செயல்பாட்டுடன் அது தொடங்கியது.

அது அக்கரைப்பற்றில்தான் உருவானது. உருவாகி அடுத்த தினமே நாடுமுழுக்க துண்டுப்பிரசுரங்களும், கையேடுகளும் வினியோகித்தது. நாங்கள் ஆள வந்தவர்களல்ல. வாழவந்தவர்கள். பிளீஸ் எங்களை விட்டுடுங்கோ என கரம் கூப்பி சகோதர இனங்களை மன்றாடியது. அதன் பின், இனி எம் பகுதியில் நடக்கும் அத்து மீறல்களை நாங்கள் தட்டி கேட்போம் என சிறிலங்கா முழுக்க பறை சாற்றியது. அதன் பின் நடந்த, ஆள் கடத்தல், வரி, கப்பம், கொலைகளுக்கெல்லாம் ஜிஹாத் உரிமையுடன் நடவடிக்கை எடுத்தது. 1985 இல் பயிற்சி முடித்துக் கொண்டு முகமட் ராபி சிறிலங்கா வந்து திருக்கோயில் பகுதியில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தங்கியிருந்தார். இவரும் ஜிஹாத்துடன் இணைந்து விடுவாரோ என்ற பயத்தில் இவரை திருக்கோவிலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்த ஒரு தமிழ் அமைப்பு முடிவெடுத்து, இவரை சங்கிலியால் கட்டி 1985 ஜனவரியில் ஒரு கொரளா காரில் கடத்திச் சென்றார்கள். ஆம் ஜிஹாத் அமைப்பின் ஒரு அதிரடி நடவடிக்கையின் மூலம், எவ்வித சிராய்ப்புமின்றி முகமட் ராபி நிந்தவூர் பிரதான வீதியில் ஒரு அதிகாலைப் பொழுது மீட்கப்பட்டார். திஸ் ஒப்பரேஷன் புறம் சிறிலங்கன் ஜிஹாத்.

அன்று முதல் அவர் ஜிஹாத் அமைப்பின் இராணுவ தளபதியாக செயல்பட்டார் ( இவர் எக்காலத்திலும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை ). ஜிஹாத் அமைப்பின் வளர்ச்சி கண்ட அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி நேரடியாக இவர்களை அழைத்து, இரண்டு மூன்று பேச்சு வார்த்தைகள் நடாத்தி, ஆயுத உதவி செய்வதாக உறுதியளித்தார். ஆம் பயிற்சியும் வளங்கப்பட்டது. ஜிஹாத் பல முறை புலிகளுடன் அக்கரைப்பற்றிலும், காரைதீவிலும், மூதூரிலும் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளது. ஜிஹாத் அமைப்பின் மிக, மிக பொறுப்பானவர்கள் எவ்வித உயிரச்சமுமின்றி புலிகள் சொன்ன இடங்களுக்கு சென்று பேச்சு வார்த்தைகள் நடாத்தியுள்ளனர். பேச்சு வார்த்தைகளுக்கு சென்றவர்களை கடத்த முயன்னற போதும், வார்த்தை ஜாலங்களால் தப்பி வந்ததுமுண்டு.

ஆம் 1985 மே 21ம் திகதி இரவு 7.15க்கு ராபி கிழக்கு மாகாண ஈரோஸ் அமைப்பினரால் நெஞ்சில் 27 துப்பாக்கி சன்னங்கள் விளாச சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கொன்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த அவ்விளைஞர் கடந்த 12 வருடங்களாக பிரான்சில் இருந்து, போன வருடம் இங்கிலாந்துக்கு மலையேறியுள்ளார் என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ளலாம். அக்கொலைக்கு கட்டளை இட்டவர் இப்போது முஸ்லீம் சகோதரர்களுடன் வியாபாரங்கள் செய்கின்றார். ஆம் மன்னிப்பை விட உயர்ந்த பண்பு இந்த உலகத்தில் வேறு என்ன மண்ணாங்கட்டி இருக்கின்றது.

இந்த ஜிஹாத் அமைப்பு அரசு செய்த சில கூலிக்கு மாரடிக்கும் வேலைகளை செய்ய மறுத்தது. ஆம் சகோதர இனத்தை இரத்த வெறி கொண்டு தாக்குவதை ஜிஹாத் குழுவினர் அங்கீகரிக்க மறுத்ததின் பயனாய், அரசு கட்டாக்காலிகளை அழைத்து துப்பாக்கிளை கொடுத்து என்னென்னவோ செய்ய தூண்டியது. கூலிக்கு மாரடிக்கும் அக்குழு நிறைய செய்தது. அவை அனைத்தும் ஜிஹாத் அமைப்பின் தலையில் கட்டப்பட்டது. ஆம் இவ்வாறு ஒன்று நடந்தால் எப்படி சமாளிப்பது என ஜிஹாத் அமைப்பினர் ஆரம்பத்திலேயே திட்டமிட்டனர். ஆம். ஜிஹாத் அமைப்பிலிருந்து பலர் மறைமுகமாக தெரிவு செய்யப்பட்டு, அல்பத்தாஹ் என்ற அமைப்பு கட்டப்பட்டது. இதுவும் 1984 ஒக்டோபரில் உதயமானது. அல்பத்தாஹ். நிறைய மார்க்க , சன்மார்க்க பணிகள் மற்றும் விதவைகளுக்கு உதவுதல், நோயாளிகளுக்கு, பாடசாலைக்கு செல்ல வழியில்லாதவர்களுக்கு உதவுதல் எனவும் செயல்பட்டதுடன், சில நாகரிக நடவடிக்கைகளிலும் இறங்கியது.. ஆம் 1985 மே 21ல் சுட்டுக் கொல்லப்பட்ட ராபியின் ஞாபகார்த்தமாக, அக்கொலைக்கு துணைபோன சகலரையும் 1985 ஜூன் 21 இரவு 7.15 க்கும், 1986 மே 21 இரவு 7.15 க்கும் கழுவிலேற்றியது. இறுமாப்புடன் உரிமையும் கோரியது.

ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்கா முழுக்க ஒண்ணரை லட்சம் துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியது. அல்பத்தாஹ் என்ற தலைப்பில், அல்லாஹ் அக்பர், அல்பத்தாஹ் அமைப்பின் இராணவத் தளபதியும், முகமட் ஹாசீம் அவர்களின் மகனுமான முகமட் ராபி, 1985-05-21 இரவு 7..15 க்கு தமிழ் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரம் ராபிக்கள் உருவாக வழி வகுத்துள்ளனர் என்பதை, மிக, மிக பெருமையுடன் அறியத்தருகின்றோம். அல்பத்தாஹ், மத்திய செயற்குழு என நாலுக்கு நாலங்குலத்தில் அது வெளியாகி அரபு நாட்டு எம்பஸிகளின் கதவுகளையும் தட்டியது.

1985 மே 21 ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்காவின் முழு பாதுகாப்பு தலைமைகளும் அக்கரைப்பற்றில் நின்றன. அம்பாரையில் இருந்தும், கொண்டைகட்டுவான் இராணுவ முகாமில் இருந்தும் ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தயாராகுங்கள். அழியுங்கள் தமிழர்களின் குடியிருப்புக்களையும், வரலாறுகளையும் என்றார்கள். ஆம் உடனடியாக ஜிஹாத், அல்பத்தாஹ் பொறுப்பாளர்கள் கூடி இது தருணமல்ல, இது பொருத்தமுமல்ல, இது நாகரிகமும் அல்ல என முடிவெடுத்தார்கள். அரசுடன் ஒத்துழைப்பதில்லை என ஒரு சேர அத்தனை மத்திய குழு உறுப்பினர்களும் முடிவெடுத்தார்கள் ( சம்மாந்துறையைச் சேர்ந்த, மறைந்த அன்வர் இஸ்மாயீல் எம்பி அவர்கள் அல்பத்தாஹ் அமைப்பில் மத்திய செயற் குழு உறுப்பினராக இருந்தவர்களில் ஒருவர் என்பதை இங்கு பெருமையுடன் சொல்லலாம். ) பாதுகாப்பு பிரிவும், கொஞ்சம் ரத்தம் துடிப்பவர்களும் எவ்வளவோ தலையணை மந்திரங்கள் ஓதினார்கள். ஆனால் அன்பு, மனிதாபிமானம், பொறுப்புணர்ச்சி, எதிர்காலம் என்பதில் முழு நம்பிக்கை கொண்ட சிறிலங்கா ஜிஹாத் அமைப்பு, எய்தவனிருக்க அம்பை நோக வைக்க விரும்பவில்லை. ஆனால்,

ஆயுதம் தருகின்றோம், கொழுத்து முஸ்லீம்களின் பள்ளிவாசல்களை என்றதும் கொழுத்தியவர்களும், ஆயுத கப்பலே அனுப்புகின்றோம் விரட்டு சோனிகளை என்று இஸ்ரேல் சொன்னதும் ஒரு மாவட்ட முஸ்லீம்களின் வரலாறையே அழிக்க முற்பட்டவர்கள்தான் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள் என்றால் அது மிகையாகாது. ஆனால் அமைப்பு ரீதியாக செயல்பட்ட எந்த முஸ்லீம்களும் எக்காலத்திலும் கூலிக்கு மாரடிக்கவில்லை. மாரடிக்கவும் மாட்டான். தற் இஸ் இஸ்லாம்.

இந்த அல்பத்தாஹ் அமைப்பின் செயல்பாடுகளில்தான் அனைவரும் அக்காலங்களில் கவனம் செலுத்தினர். யார் இவர்கள். எங்கிருந்து தொழில்படுகின்றார்கள் என கண்ணுக்குள் விளக்கெண்ணை போட்டு தேடினார்கள். அதன் ஒரு வெளிப்பாடுதான் பிற்காலங்களில். ஓ இப்படியும் ஒரு ஆள்மாறட்டம் செய்யலாமோ என தோன்றிய சங்கிலியன் படை. ஆம் 1991 முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியதும், முஸ்லீம்களின் வீட்டுத் தொகுதியொன்றை விடுதலைப்புலிகள் தமது அச்சகமாக பாவித்தார்கள். அந்த அச்சகத்துக்கு வே.பிரபாகரன் அவர்கள் வந்து போவது வழமை. ஆனால் ஒரு நாள் தலைவர் வந்து ஒரு முக்கால் மணி நேரத்தின் பின் வெளியேறி இரண்டு நிமிடத்தில் அவ் அச்சகம் வெடித்துச் சிதறியது. அதற்கும் இந்த அல்பத்தாஹ்வுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற போர்வையில், யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே அக்காலங்களில், தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்த முஸ்லீம் சகோதரர்களை இந்த சங்கிலியன் படை வறுத்தெடுத்ததாகவும் அப்போது பட்சிகள் பேசிக்கொண்டன.

இப்போது சிறிலங்காவில் ஜிஹாத் இருக்கிறதா, இயங்குகின்றதா என்பதுதான் அனைவரின் கேள்வியும். ஜிஹாத் என்பது வாழ்க்கையுடன், வாழ்க்கைக்காக போராடுவது. அடுத்தவனைப் போய் வம்புக்கிழுப்பதல்ல. வம்புக்கிழுக்க இஸ்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை. அப்போதைய ஜிஹாத்தை சிலர் வம்புக்கிழுத்து, வம்பில் மாட்டிவிட நினைத்தனர். அதனால் நடப்பது தர்மயுத்தம், தமிழ் பேசும் தமிழ் மக்களுக்கும், சிங்கள அரசுக்கும் இடையில் ஒரு தர்மயுத்தம், அது தன் வழியில் நடக்கட்டும், நாம் முதலில் எம்மை புடம் போட்டுக் கொள்வோம். இக்கால கட்டங்களில் எம்மிடமும் ஆயுதம் இருந்தால் அது வேறு, வேறு பின் விழைவுகளை ஏற்படுத்தும் என்பதை பல மார்க்க அறிஞர்களும், புத்தி ஜீவிகளும் எடுத்துரைக்க, ஜிஹாத், அல்பத்தாஹ் அமைப்புக்களின் பைல்கள் மூடப்பட்டு அனைவரும் 1987 டிசம்பரில் நாடு கடந்தனர். கடந்து, முஸ்லீம்களின் கல்வி, வியாபார விடயங்களில் 100 வீத கவனம் செலுத்தினர். செலுத்திக் கொண்டுமிருக்கின்றனர். அதன் பயன்தான் இன்றைய முஸ்லீம்களின் கல்வி, வியாபார எழுச்சிகளெல்லாம். இல்லாவிட்டால், இன்றைய எமது முஸ்லீம் இளைஞர்கள் எங்கேயோ அகதி அந்தஸ்துக்கு விண்ப்பித்துக் கொண்டிருப்பர்.

இனி ஒரு ஜிஹாத்தோ, ஒரு அல்பத்தாஹ்வோ சிறிலங்காவில் தோன்றவும் கூடாது, தோன்றவும் மாட்டாது. இப்போது அனைவருக்கும் தேவை ஒரு பொருளாதாரப் புரட்சி. அந்தப் புரட்சி வெடிக்க நிச்சயம் சிறிலங்கா ஜிஹாத் கொடிபிடிக்கும். அப்புறம் மகிந்தவின் காதையோ, ரணிலின் காதையோ, சரத்பொன்சேகாவின் காதையோ கடித்து, மானில சுயாட்சியாவது எங்களுக்கு தாங்கோ மக்காள் என கேட்போம். ஒன்று பட்டால்தால் உண்டு வாழ்வு.

இதில் உள்ள தகவல்கள் எமது உள்ளக் கிடக்கைகளின் ஒரு பனித்துளி அன்பின் பக்ஷீர் காக்கா. இவ்வாறு ஆயிரம் கோடி பனித்துளிகள் வன்னியில் உறங்கிக் கிடக்கின்றன சகோதரர்களே. இனி இவைகளை மறந்துவிட்டு நல்லதோர் உலகம் செய்வோம்.

“Federalism and war crimes investigation” Sivajilingam: The wildcard Tamil candidate : Kumar David (The Island)

Sivajilingam M KTNA parliamentarian, K. Sivajilingam, will probably come third, and if he succeeds in attracting a fair proportion of the TNA’s base he may receive more than three hundred thousand votes. However if the TNA and other Tamil leaders undercut him he will fall below 100,000. My reasoning is as follows. The Tamils of the N&E number 10-12% of the population, and 10% of the 14 million registered voters is 1.4 million – I prefer the lower percentage because of demographic uncertainties of Tamil population movement and migration. Usually we expect over 70% poll in an exciting election, however massive numbers are unregistered or displaced and since the TNA is not officially contesting there will be abstentions. We have to opt for a much lower percentage; at a guess 50% (700,00) N&E bred Tamil voters, wherever they live, may turn out, if encouraged by their leaders.

Douglas, Sritharan and possibly Pillayan will root for Rajapakse till they are hoarse, some Tamils will pick Fonseka directly, and the Left candidates – especially Bahu – will attract Tamil votes. After these allowances, would it be unreasonable to guess that 300,000 will pick Sivaji? If, however, jealous Tamil leaders undermine him, which is quite possible, this number will fall precipitately.

This kind of pie in the sky arithmetic may turn out to be silly; we will know in 30 days. But the ballpark numbers make the Sivaji phenomenon interesting for three reasons; in the absence of a landslide in the Sinhalese vote it may cause both major candidates to fall short of a 50% poll. Second, if it goes to recount Sivaji’s voters’ second preferences will decide the outcome. Third, and very important, a large Tamil turnout (for Sivaji or for others) will revitalize Tamil politics at home and throw up new leaders. It will also debunk the boycott-craze of numskull sections in the post-LTTE Tamil diaspora and in the TNA.

If the Bahu- Shivaji linkup becomes strong, long-lasting and is built on mutual trust it could lay the foundations for an important and long awaited trend reversing the decline that started at the fateful 1964 LSSP Party Conference.

Who is this Sivajilingam?

Sivaji is not known in the South so some brief bio may be useful. He is one of the early pioneers of Tamil resistance from the Thangathurai-Kuttimani, pre-Prabakaran era and is probably the only pioneer militant who is still active in Tamil resistance today. He has been identified with emancipation and social justice campaigns on behalf of socially oppressed Tamils and when in the Federal Party, Sivaji campaigned against his uncle Mothilal Nehru in support of oppressed caste candidates.

He was a bridge between the old and new political trends in Tamil nationalism in the 1970s and 1980s. There is an anecdote, which I cannot confirm, that when Prabakharan was stuck in Sri Lanka in the early 1980s, he turned in desperation to Sivaji who arranged a boat to India for VP and his mates. Nevertheless, many of Sivaji’s contemporaries were killed in the LTTE-TELO fratricidal war of 1986.

Troubled TNA waters

The TNA is sliced like a pizza; the three slices are of about equal significance. A leadership group including Sampanthan wishes to support Fonseka and opposes posting a TNA candidate. Another section, dinosaurs that have not been reincarnated from their cringing-before-LTTE previous life, cry boycott. The third slice was determined to put forward a Tamil candidate, refused to pull back and nominated Sivaji, but offered to withdraw if there was an official TNA nominee. Now they have forced a campaign dilemma on the leadership: Dare the TNA sabotage a Tamil parliamentarian and support an erstwhile Tiger hunter and recently retired Rajapakse trooper, Fonseka?

Sampanthan and the TNA are caught by the short and curlies. How can they traverse the North and East campaigning for LTTE vanquisher Fonseka against one of their own? Nor can they refrain from campaigning all together; that would be a walkover –point, set and match – to Douglas! Foist by its own petard the TNA may still do the only thing it can, and accidentally turn it into a shrewd move. It could, for appearances, support Sivaji, but slip in the second preference for Fonseka recommendation in the campaign, thus hanging on to both baby and bathwater. If the TNA gets semi-officially into tow, the Tamil poll may increase substantially and Fonseka’s eventual gain could be large.

War crimes investigations

Sivaji’s two-point manifesto has my endorsement: Federalism as the solution to the national question and a demand for an internationally credible investigation of war crimes. Fonseka, in a newspaper interview, asserted that he had information that persons coming forward to surrender with white flags raised were shot dead, in cold blood, by the army, pursuant to a premeditated decision by government leaders. The next day he tried his darndest to backtrack since there was a storm of protest; “You are a traitor letting the side down by exposing these things” was the gist of the protests – apparently even war crimes are military secrets! In his capitulation he went on to say that that there was no violation of international law and that as the then army commander he would take full responsibility for the behaviour of his legions.

Let us take this matter in two distinct steps. Is the assertion of cold-blooded murder true or false? This and this alone is the primary factual issue that overrides everything else in importance. The conflict between Fonseka and the Rajapakse brothers, electioneering, these are ethically and legally irrelevant; the truth or falsity of the alleged cold-blooded shooting is of primary import. It is so serious a matter and emotions are in overdrive, so there has to be an investigation with international participation. Presidential Commissions have become such shams that only unimpeachably respected international participation can restore a modicum of credibility.

The second step follows after that. Fonseka’s opinion that no international law was violated is tendentious; his personal involvement is implicit and he has an interest in the outcome. Once an independent investigation is completed, if it is found that there is prima facie evidence of indictable offences, there must be prosecutions. None of this should be prejudged, that would be wrong. All persons, if any, held indictable must be prosecuted – Generals, Defence Secretaries, even Heads of State; there is no indemnity for war crimes.

The terms of reference of the investigation must include a probe of alleged LTTE war crimes; it must not be confined to a probe of the state. This may seem pointless if possible offenders are deceased; not so, moral responsibility must to be assigned, even posthumously. Let us take a cool-headed, mature, unemotional approach to alleged war crimes, whichever political party or presidential candidate one supports or what community one belongs to. There is no alternative if we want to be a civilised nation. Sivaji could not be more right than to demand a probe, on behalf of his people, into this and allegedly 50,000 other deaths, but he needs to extend the scope of his demand to include alleged war crimes by both sides.

Federalism

Mucking around with the 13th Amendment, plus minus or zilch is getting nowhere; 13A has become contentious for the way in which it was enacted as much as for what it says. A new constitution needs to be written making 13A, in its locale as an amendment, irrelevant. Why should the national question be confined to an amendment? Decentralisation in general, and the devolution of power to address minority concerns, are aspects of the balance of power between centre, regions and minorities; they are central to, and must be located in, the heart and body of the constitution. There is near universal agreement that the executive presidency must be abolished or muzzled, that the existing proportional representation system must be discarded, the 17th Amendment enforced and a slew of other changes made. Clearly, a wholly new constitution, bottom up, has to be drafted incorporating a new structure of power with the national question uppermost but not the only issue to be addressed.

I am in agreement with Sivaji that the federal option is the best. A group at the Centre for Policy Alternatives (CPA) led by Rohan Edirisinha and Asanga Welikala has done essential theoretical groundwork and the material is accessible in books and scholarly papers. Without detracting from the quality of this work I raise two concerns, the number of federal units, and asymmetrical rather than symmetrical devolution. The CPA group has retained a putative eight-unit federal model (one Tamil unit plus seven others) based on Sri Lanka’s nine provinces. I understand but do not agree with their reasoning, which is that to try to change units, merge provinces, or shift districts around will end in dispute and failure. But, federalism envisages substantial autonomy and an eight way split of so much autonomy in a small country will be a mad-hatters tea party. There has to be just one Tamil unit consisting of the whole of the North and still to be demarcated portions of the East. A new delineation of the rest of the country, limited to just two, or maybe three at most federal units needs to be worked out.

Asymmetrical devolution

In conversations, the CPA group concedes the logic of an asymmetrical relationship; that is the centre relates to the Tamil unit differently from its relationship to other units – be they three or eight. Asymmetry in inter-unit relationships, in so far as the Tamil unit is concerned, is also necessary. However the CPA group is reluctant to formally support the concept of asymmetry. They opine, “It is too complicated to sell; the devil is in the details; there will be so much opposition to an asymmetrical package from stakeholders that the exercise will flounder”. My view is that the political relationship between a putative Tamil unit and the centre, and the relationship between this unit and the other (“Sinhalese”) units, will need to be different, from the relationship between these units and the centre, and the relationship among these units themselves. The UK (England, Scotland, Wales, Northern Ireland) arrangement is radically asymmetrical and the EU is also a supra-scale asymmetrical relationship between confederate states; all to accommodate diversity. Sri Lanka must construct its own asymmetrical model sui generis, but learn from elsewhere as need be.

Sivaji is on the right track in standing for Federalism; it is the model that can sort out the ethnic conflict; however fleshing it out needs a lot more work. But first one must sell the idea and Sivaji has made a good start by making it one of the pillars

வட.- கிழக்கில் இராணுவ மயமாக்கலை நீக்கினால் தேர்தலில் போட்டியிடாது விலகிக் கொள்வேன் : சிவாஜிலிங்கம்

sivajilingam.jpgவடக்கு கிழக்கு இராணுவ மயமாக்கல் நீக்கப்பட வேண்டும். உயர் பாதுகாப்பு வலயம் என தடை செய்யப்பட்டு மக்கள் குடியேற்றத்திற்குத் தடையாக இருப்பதை நீக்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் என தடுப்பு முகாம்களில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர், யுவதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இதற்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதம வேட்பாளர்கள் இருவரும் பகிரங்கமாக வாக்குறுதி தந்தால் நான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டிடுவதில் இருந்து விலகிக் கொள்கின்றேன்” என ஜனாதிபதி வேட்பாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தருமான சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கம், தாம் போட்டியிடுவதற்கான காரணத்தை விளக்கும் பொருட்டு, ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை யாழ்ப்பாணம் பஸ்தியான் விடுதியில் இன்று காலை 9.45 மணியளவில் நடத்தினார்.

மாநாட்டில் அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவர் அங்கு கூறியதாவது :

“தமிழ் மக்களின் வரலாற்றில் மிகவும் மோசமான பின்னடைவுகள், பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள முக்கியமான காலகட்டத்தில் தான் ஜனாதிபதித் தேர்தல் எம் முன் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.

விக்கிரம்பாகுவுடன்….

இதனையிட்டு பெரும் கருத்துக் கணிப்புகள் வெளிநாடுகளில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவுடன் கலந்துரையாடிய போது, அவர் என்னிடம் தனக்கு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தர வேண்டுமென என்னிடம் கேட்டிருந்தார். நான் ஏனையோருடனும் இது குறித்துக் கலந்துரையாட ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்திருந்தேன்.

இச்சமயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனவும் அதற்கு சம்பந்தரை நிறுத்த நடவடிக்கை எடுப்பதெனவும் ஓர் அபிப்பராயம் காணப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் கூடி கலந்துரையாடிய போது, தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தோம்.

இந்தியாவில் ஊடகவியலாளர் மாநாடு

இந்நிலையில் நான் இந்தியா சென்ற வேளையில் செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்பு கொண்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் எவரையும் நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்திருந்தது. இவ்வேளை நான் இந்தியாவில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்தேன்.

ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடியபோது சம்பந்தர், சரத் பொன்சேகாவுடனோ மகிந்தவுடனோ கதைப்பதில் பயன் இல்லையெனக் குறிப்பிட்டார். நெதர்லாந்து எமக்கும் அரசுக்கும் இடையில் தூதுவராக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நான் இதனை அந்தக் கூட்டத்தில் எதிர்த்தேன்.

கடந்த அறுபது வருடங்களாக நாம் பலராலும் ஏமாற்றப்பட்டுள்ளோம் இந்நிலைமை இனிமேலும் தொடரக் கூடாது எனவும் வலியுறுத்தினேன. எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதியுடன் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் மழுங்கடிக்கப்படும் எனவும் தெரிவித்தேன்.

தமிழ்க் கூட்டமைப்பை உடைக்க முயன்று வருகின்றோம் என யாராவது கருதினால் அது பிழையான கருத்தாகும்.” இவ்வாறு அவர் கூறினார்.
 
வீரகேசரி இணையம் 12/19/2009

‘டெலோ’விலிருந்து சிவாஜி, ஸ்ரீகாந்தா விலகல்

sivajilingam.jpgநாடா ளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் தாங்கள் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தி(டெலோ) லிருந்து விலகிக் கொள்வதாக கட்சித் தலைமைப் பீடத்திற்கு அறிவித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுயேட்சையாகப் போட்டியிடுவது குறித்து அக்கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகள் காரணமாகவே இவர்கள் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்திருந்த போதிலும் தமது கட்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு மாறாகச் செயல்படுவதாக டெலோ கூறுகின்றது.

நேற்றிரவு டெலோ முக்கியஸ்தர்கள் கொழும்பில் கூடி, தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்து ஆராய்ந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை வாபஸ் பெறுமாறு சிவாஜிலிங்கத்திடம் வலியுறுத்திக் கேட்ட போதிலும் அவர் அதனை நிராகரித்து விட்டதாகக் கூறப்படுகின்றது.

நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்தும், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இன்று அறிக்கையொன்றை வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தற்போது வெளிநாடு ஒன்றில் தங்கியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் நாளை நாடு திரும்புகின்றார்.

நாளை மறுதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு கூடி, தமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்தும் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் விரிவாக ஆராயவிருப்பதாக கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
 
வீரகேசரி இணையம் 12/17/2009

நடந்தது என்ன? சூரிச் மாநாடும் எழுந்த விமர்சனங்களும்! : மீட்சி

Zurich_TamilParys_Conference(19 -22 தொடக்கம் நவம்பர் 2009ல் தமிழ் தகவல் நடுவத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு சூரிச்சில் நடந்து முடிந்த இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் பங்குபற்றிய மாநாட்டைப் பற்றி ஊடகங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன. இதன் உண்மை நிலையை பலரும் அறிந்து கொள்வதற்காக ‘மீட்சி’யின் சார்பில சில கேள்விகளை தமிழ் தகவல் நடுவத்தின் நிறைவேற்று செயலரான திரு வரதகுமார் அவர்கள் முன் வைத்தோம் அவர் கொடுத்த பதில்களை கீழே காணலாம்.)

1.சமீபத்தில் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் பங்கு பற்றிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதனை தமிழ் தகவல் நடுவம் ஒழுங்கு செய்திருந்தது என ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இது உண்மையானால் இதை கூட்டியதன் நோக்கம் என்ன?

Zurich_TamilPartys_Conferenceஏறத்தாழ கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெற்ற போர் அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களையுமே பாழடித்து சிதறடித்து விட்டது. அனைத்து மக்களும் பவீனப்படுத்தப்பட்டு தமது உரிமைகளை இழந்து, சலுகைகளை நம்பி வாழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இந்த கொடூரமான போரினால் எந்த இனமுமே பயனடையவில்லை!. யாருமே வெற்றி பெறவில்லை!. மிஞ்சியது எல்லாம், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சியும் உயிர் உடமை இழப்புகளும் அவலங்களும் ஏக்கங்களுமே!

யுத்தம் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் குறிப்பாக வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம் மக்களும், மலையகத் தமிழர்களும் தமிழ்பேசும் சிறுபான்மை சமூகங்கள் என்ற ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் இன்னல்கள் அழிவுகள் ஆகியவற்றுக்குள் அகப்பட்டு அவதியுற்று வாழ்கிறார்கள். தமது தனித்துவங்களை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள். பலர் அன்றாட வாழ்விற்கே அல்லாடிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தங்கள் எதிர்காலம் இலங்கையில் எப்படி இருக்கும் என்ற ஏக்கத்திலும், எதிர்காலத்தில் நம்பிக்கையின்மையிலும் வாழ்கிறார்கள். போர் முடிந்தாலும், ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும், ஜனநாயகம், மனித உரிமைகள், வன்முறையற்ற வாழ்வு, அடிப்படை அரசியல் அபிலாசைகள் ஆகியவை இன்னமும் தொடர்ந்து எட்டாக் கனிகள் ஆகிவிடுமோ என தமிழ்பேசும் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்த்தான் நாம் கட்சி, கொள்கை பேதங்களுக்கு அப்பால் தமிழ் பேசும் மக்களின் அரசில் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அனைவரையும் அழைத்திருந்தோம்.

இப்பொழுது சிறீலங்கா ஒரு முக்கியமான காலகட்டத்தில் வந்து நிற்கிறது சிறுபான்மையினங்கள் அலட்சியப்படுத்தப் பட்டதால் நாட்டை விட்டு ஓடியும், இடம் பெயர்ந்தும், முகாம்களில் அல்லலுற்றும், சிறைச்சாலைகளில் வாடியும் வாழ வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டடிருப்பதை நாளாந்தம் நாம் காண்கிறோம். தொடர்ந்தும் பெரும்பான்மை அரசு சிறுபான்மை சமூகங்கள் மீது தனது மேலாதிக்கத்தையும் பார பட்சத்தையும் மேற்கொண்டு வருகிறது.

மேலும் சிறுபான்மைக் கட்சிகளிடையே உள்ள சிறு வேற்றுமைகளைத் தூண்டியும், உபயோகித்தும் அவர்களை பிரித்தும், சிறுபான்மையினரை இரண்டாந்தரப் பிரஜைகளாக தொடர்ந்து வைத்திருக்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறது. இவற்றிலிருந்து மீள்வதற்கும் மக்களின் விடிவிற்காகவும் சிறுபான்மையினத்தின் வாழ்வாதார விருப்புகள், மொழி, மதம், அரசியல் சம்பந்தமான உரிமைகள் ஆகியவற்றை அடைவதற்கும் ஒரு வன்முறையற்ற புது அணுகுமுறை தேவை என்பதனையும் அதற்கேற்ற சந்தர்ப்பமும் இதுவே எனவும் உணர்ந்தோம்

வடக்கு- கிழக்கு வாழ் தமிழ், முஸ்லீம் மக்களும், மலையகத் தமிழர்களும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள், இன்னல்கள் ஆகியவற்றிக்கான நிவர்த்திகள், அவர்களின் உரிமைகள், அபிலாசைகள் சம்பந்தமான அரசியல் நடவடிக்கைகளை எப்படி ஒரு பொது வேலைத்திட்டத்துடனும், அணுகு முறையுடனும், முன்னெடுக்கலாம் என்பவை பற்றி, தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் ஒரு சுயாதீனமானதும், சுமுகமானதுமான சுற்றாடலில் கலந்து உரையாடுவதற்கும், வேறுபாடுகளை விலக்கி சில ஒருமைப்பாடுகளையும் இணக்கங்களையும் எட்டவும், எதிர்காலத்தில் ஒரு பொது வேலைத்திட்டத்தையும் அணுகு முறையையும் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை மனம் திறந்து ஆராய்வதற்கும், நீண்டகால நோக்கில் இனங்களுக்கிடையான நல்இணக்கத்திற்கும் அரசியல் சமூகம் சம்பந்தமான நம்பிக்கையான கட்டமைப்புக்களை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை எய்தவும் இந்த மாநாடு வழிசமைக்கும் என்ற நோக்கங்களுடன் தான் இம்மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டது.

மேலும் எதுவித அரசியல் அழுத்தங்களும் இல்லாதிருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தாமாநாடு இலங்கைக்கு வெளியே ஒழுங்கமைக்கப்பட்டது. இங்கு வருகை தந்திருந்த அனைவரும் தத்தம் கருத்துக்களை சுயாதீனமாகவும், பரஸ்பர புரிந்துணர்வோடு தெரிவிக்கவும், பரிமாறவும் இந்நிகழ்வு வாய்ப்பளித்தது. இந்த நிகழ்வை ஒழுங்கு படுத்துவதற்கு பல ஆய்வுகளை முன்னெடுத்து TICயில் காலத்துக்கு காலம் நடைபெற்று வரும் சமூக ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் வெளிவரும் தகுந்த கருத்துக்களை உள்வாங்கி, எம்முடன் தொடர்பில் உள்ள இலங்கையிலும் வெளியேயும் வாழும் சமூக அரசியல் செயலாளர்களின் (activists) ஆலோசனைகள் பெற்று, இதில் பங்குபற்றுவோரை தொடர்பு கொண்டு இதன் நோக்கங்களை தெளிவுபடுத்தி, அவர்களின் அனுமதியை பெற ஒழுங்கமைப்புக்கான வெவ்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, பல மாதங்கள் ஆகிவிட்டன.

முதலில் இதனை லண்டனில்தான் நடாத்துவதாக இருந்தோம். ஆனால் சில நடைமுறைப் பிரச்சனைகளால் சுவிற்சிலாந்துக்கு மாற்றவேண்டி வந்தது. சம்பந்தப்பட்ட சுவிஸ் அதிகாரிகளின் உறுதுணையுடன் இதனை ஒழுங்குபடுத்த முடிந்தது.

2.தமிழ் தகவல் நடுவம் தனியாக இதை சாதித்திருக்க முடியாது எனவும், இதன் பின்னணியில் வேறு சக்திகள் இருக்கக் கூடும் எனவும் ஊகங்கள் எழுந்துள்ளன? இதன் உண்மை நிலை என்ன?

கண்டிப்பாக இந்நிகழ்வை தமிழ் தகவல் நடுவம் தனியாக நின்று சாதித்திருக்க முடியாது. இதன் பின்னணியில் நின்ற சக்திகள் வேறு யாரும் இல்லை. நல்நோக்குடனும், நல்ல சிந்தனைகளுடனும், மக்களை மனதார நேசிக்கும் தனிநபர்களே கூடிய பங்காளிகளாவார்கள். தம்மை இனங்காட்டாது நாம் எடுத்த முயற்சியினைத் தரளவிடாது முன்னெடுக்க ஊக்குவித்த சுயநலமற்ற இத்தனிமனிதர்கள் இருக்கும் வரை மேலும் பல காரியங்களை சாதிக்கலாம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

இவர்களைவிட International Working Group (IWG) என்ற அமைப்பும், Essex பல்கலைக் கழகத்தின் மனித உரிமைகள் மையத்தின் Initiative on Conflict Prevention through Quietயைச் சேர்ந்த சிறப்பாய்வு அறிஞர்களும், ஆய்வாளர்களும் ஆவர்.

இக் கலந்துரையாடல் இலங்கைவாழ் மக்களது, முக்கியமாக தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை ஜனநாயக முறையில் வென்றெடுக்க வழியமைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இதனை நடாத்துவதற்கான பெரும்பாலான செலவினை சுவிஸ் அரசாங்கமும், IWGயும், Essex பல்கலைக்கழகத்தின் மனித உரிமை மையமும் பகிர்ந்து கொண்டன. மேலதிக TIC பிரதிநிதிகளின் போக்குவரத்து செலவுகள் இல்கையிலிருந்து வருகை தந்த சிலரது தொலைபேசி, உடுப்புச் சலவை செலவுகள் போன்றவற்றிக்கு தனியார் பண உதவிகளை நாடினோம்.

இதைவிட இங்கு வருகை தந்ந சில பிரதிநிதிகள் தம் சொந்தச் செலவிலேயே பயணச் சீட்டுகளை வாங்கி வந்தார்கள் என்பதும் தங்குவதற்கான செலவினையும் தாங்களே பொறுப்பெடுத்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேலும் இக்கலந்துரையாடல் குறிப்பிட்டபடி நல்ல முறையில் சிறப்பாய்வு அறிஞர்களது உதவியுடன் திறமையுடன் நடந்ததால் இம் முயற்சியை மேலெடுத்துச் செல்லத் தாம் தயாராக உள்ளோம் என்று சுவிஸ் அரசாங்கம் கூறியுள்ளதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

3.இக் கூட்டத்தில் என்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டன? அவற்றிலிருந்து எடுக்கப்பட முடிவுகள் அல்லது தீர்மானங்கள் யாவை?

இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்களின் எதிர்காலம் பற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஒரு கவலையான உணர்வு நிலவியதின் பின்னணியிலேயே இம்மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டது.

ஒரு திறந்த நோக்கு, பரஸ்பர மரியாதை, ஆக்கபூர்வமான விவாதம் எனும் அடிப்படையிலேயே இக் கூட்டம் நடைபெற்றது. பங்குபெற்றோர் யாவரும் ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றிக்காக ஒற்றுமையுடனும், ஒன்றுபட்ட நோக்குடனும் உழைப்பது என உறுதி பூண்டனர். தம்மிடையே பேசி முக்கியமான விளக்கங்களைப் பெற்று ஒரு பொது நோக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அத்துடன் தமிழ் பேசும் மக்கள் ஒரு சமாதானமான செழிப்பான சமூகமாக உருவாவதற்குத் தேவையான அவர்களது உரிமைகளை பெறவதற்காகத் தொடர்ந்தும் இப்டியான கலந்துரையாடலில் பங்கெடுத்துக் கொள்வதெனத் தீர்மானம் எடுத்துக் கொண்டனர்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால, இடைக்கால, குறுகியகால ஆதங்கங்கள் பற்றிய தமது கவலைகளை பகிர்ந்து கொண்டனர். இதில் எல்லோருக்கும் ஏற்புடையதான யாவரையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வினை உருவாக்குதல் பற்றியும் ஆராயப்பட்டது. அத்துடன் தற்போதுள்ள பிரச்சினைகளான இடம் பெயர்ந்த தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றம், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர், காணாமல் போயுள்ளோர், இராணுவ மயமாக்கல், சட்டம் ஒழுங்கைப் பேணுதல் ஆகியவை பற்றியும் கலந்துடையாடப்பட்டது. இடம்பெயர்ந்த மக்கள் மாண்புடனும், பாதுகாப்பாகவும் தமது வசிப்பிடங்களுக்கு சென்று வாழ ஏதுவாக அவர்களுக்கு தேவையான வீட்டுவசதிகள், வாழ்வாதார உதவிகள் ஆகியவற்றை அவசரமாக செய்து கொடுக்க வேண்டிய அவசியத்தையும் அவை ஒரு சுயாதீனமானதும் அதிகாரம் உள்ளதுமான ஒரு சிவில் அதிகாரத்தின் மேற்பார்வையில் நடைபெறவேண்டிய தேவையையும் ஆராய்ந்தனர்.

மாநாட்டின் முடிவில் பங்கு பற்றிய அரசியல் கட்சிகள் யாவும் கீழ்க்கண்ட இணை அறிக்கையை வெளியிட்டன.

Zurich_TamilParys_Conferenceஇணை அறிக்கை:
தமிழ்பேசும் மக்களின் அரசியல் கட்சிகளை பிரதிநிதிப்படுத்தும் நாம் ஏகோபித்த எமது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வழிசெய்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இக் கூட்டத்தை ஆமோதித்து, சகல தமிழ்மக்களின் பிரதிநிதிகளிடையே ஒரு பொது மேடையை உருவாக்குவதற்கு எமது ஆதரவை உறுதி செய்கிறோம்.

தமிழர், முஸ்லீம்கள், இந்திய வம்சாவழித் தமிழர்கள் ஆகிய மூன்று பிரத்தியேகப் பிரிவினரையும் உள்ளடக்கியதே தமிழ்பேசும் மக்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

வேறுபட்டதும் வித்தியாசமானதுமான அடையாளங்களும், அக்கறைகளும், நிலைப்பாடுகளும் வெவ்வேறு கட்சிகளுக்கிடையே உண்டு என்பதை மதிக்கிறோம்.

தமிழ்பேசும் மக்களிடையே ஒற்றுமையும் ஒருமித்த கருத்தும் தேவை என்பதை ஏற்றுக்கொண்டுள்ள வேளையில் சிலபிரச்சனைகளும் அவற்றை அணுகும் முறைகளிலும் வேறுபாடு உள்ளதை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

ஒரு நீதியான, நிரந்தரமான, அரசியல் தீர்வுக்காக சமூகத்தின் சகல பகுதியினரையும் உள்ளடக்கிய ஒரு மாண்புள்ள மதிப்புள்ள சமாதானமான செயற்பாடுகளை முன்னெடுப்போம் என உறுதி செய்கிறோம்.

ஏற்றுக்கொண்டு எமது கலந்துரையாடலை தொடர்வோம் என் உறுதி செய்யும் பெயர்கள்.

திரு வீரசிங்கம் ஆனந்தசங்கரி – தமிழர் ஜக்கிய விடுதலை முன்னணி
திரு பெரியசாமி சந்திரசேகரன் -மலையக மக்கள் முன்னணி
திரு டக்ளஸ் தேவானந்தா- ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி
திரு அப்துல் றாஃப் ஹக்கீம் -சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்
திரு முகமது ஹிஸ்புள்ளா – அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்
திரு மனோ கணேசன் – ஜனநாயக மக்கள் முன்னணி
திரு குலசேகரம் மகேந்திரன் – தமிழீழ விடுதலை இயக்கம்
திரு சிவசுப்பிரமணியம் நந்தகுமார் -ஈழப் புரட்சி அமைப்பு
திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
திரு சுரேஸ் பிரேமச்சந்திரன்- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
திரு R சம்பந்தன் – தமிழர் தேசியக் கூட்டமைப்பு
திரு சிவநேசதரை சந்திர காந்தன் – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
திரு மாவை S சேனாதிராசா – இலங்கைத் தமிழரசுக் கட்சி
திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் – தமிழீழ விடுதலைக் கழகம்
திரு திருநாவுக்கரசு சிறீதரன் – பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.
திரு ஆறுமுகம் தொண்டமான் -இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்.

4.இக்கூட்டத்தைப்பற்றி முன் கூட்டியே எவ்வித அறிவித்தல் கொடுக்காமலும் கூட்டம் நடைபெறும்போது ஊடகவியலாளர்க்கு அனுமதி மறுத்ததிற்கும் காரணம் என்ன?இதனால் பல சந்தேகங்கள் மக்களிடையே எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்த மாநாட்டை நாம் ஒழுங்கு செய்வதில் சில நடைமுறைச் சங்கடங்கள் ஏற்ப்பட்டன. அதன் காரணமாகவே நாம் ஊடகங்களின் பங்களிப்பை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. பங்குபற்றியோரின் பாதுகாப்பு பற்றிய சுவிஸ் அரசாங்கத்தின கணிப்புக்களையும் கவலைகளையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டியிருந்தது. அத்துடன் இம்மாநாடு ஊடகங்களினால் ஒரு அரசியல் மேடையாக்கப் படுவதையும் நாம் விரும்பவில்லை.

ஆனால் ஊடகங்களை முற்று முழுதாக தடைசெய்வது எமது நோக்கமாக இருக்கவில்லை. நாம் பங்கு பற்றியோரினதும் சுவிஸ் அரசாங்கத்தினதும் பாதுகாப்பு பற்றிய கவலையையும் ஊடகங்களின் அனுமதித் தேவைகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டி இருந்தது.

இருப்பினும் ஒவ்வொரு கூட்ட முடிவிலும் கூட்டத்தில் பங்குபற்றியோர் ஊடகங்களையோ அன்றி சாதாரண மக்களையோ சந்திப்பதற்கு எவ்வித தடையும் இருக்கவில்லை. தினமும் அவர்களை தமிழ் உடகங்கள் உட்பட பலர் வந்து சந்தித்தனர். நண்பர்களும் தமிழ் மற்றும் சிறீலங்காவில் உள்ள ஊடகங்களும் கூட்டத்தில் பங்கு பற்றியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாளாந்த நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொண்டுள்னர் என்பதனை நாம் அறிவோம். அரசியல்வாதிகள் தம் ஆதரவாளர்களை சந்தித்து கூட்டத்தின் நோக்கம் பற்றி ஆராய்ந்தும் அங்கே பேசப்பட்ட விடயங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டனர். எனவே இம்மாநாடு ரகசியமாக நடாத்தப்பட்டது என்று கூறிவிட முடியாது.

தமிழர் தகவல் நடுவம் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மக்களுக்காகவே உழைத்துள்ளது. மக்களுக்கு நாம் யார் என்பதும் என்ன செய்கிறோம் என்பதும் தெரியும். இது ஒரு திறந்த அமைப்பு. இங்கே ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை சிறீலங்காவில் வாழும் எல்லா சமூகத்தின் சகல கூறுகளுடனும் நாம் தொடர்பு வைத்துள்ளோம். இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்தமையே எமக்குள்ள மதிப்புக்கு சான்றாகும்.

நாம் பல்வேறு போராளிக் குழுக்களுக்கோ அல்லது உளவு நிறுவனங்களுக்கோ துணைபோவதாக அல்லது அவர்களின் முகமூடிகளாக (fronts) செயற்படுவதாக பழிசுமத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது எமக்கு ஒன்றும் புதிதன்று. இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்தில்லை. நாம் சாதாரண மக்களில் நம்பிக்கை உடையவர்கள். அவர்களே எங்களை மதிப்பீடு செய்யும் புத்திசாதுரியம் நிறைந்தவர்கள்.

இந்த நிகழ்வின் பின்னணியில் எதுவித உள் அரசியல் நோக்கங்களும் இருக்கவில்லை. எந்தவித அரசியல் சக்திகளும் இல்லை. புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்களும் இருக்கவில்லை. உங்களுக்கு எம்மால் உத்தியோக பூர்வமாக தெரிவிக்கப்பட்ட, தெளிவாக்கப் பட்டதிற்கு அப்பால் வேறு எந்த நோக்கங்களோ நிகழ்ச்சி நிரல்களோ அமைப்புக்களோ இல்லை. நாம் பங்கு பற்றியோர்களது அரசியல் நிலைப்பாடுகளுக்கு மரியாதை அளித்தும், மிகுந்த பொறுப்புணர்வோடுமேதான் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து நடாத்தி முடித்துள்ளோம். இதனை காலம் சொல்லும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு தொடர்ந்தம் மிகுந்த பொறுப்புணர்வோடதான் நாம் நடந்து கொள்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

5.இக்கலந்துரையாடலில் பங்கு பற்றியோர் யாவரும் இலங்கையில் இருந்தே வந்துள்னர். எனவே இக் கலந்துரையாடலை இலங்கையில் நடத்தாது வெளிநாடு ஒன்றில் நடத்த வேண்டியதன் தேவை என்ன?

இம்மாநாட்டை இலங்கைக்கு வெளியே நடத்தியமைக்கு முக்கியகாரணம் இதில் பங்கு கொண்டோர் யாவருக்கும் ஒரு நட்பான சூழலை உண்டாக்குவதேயாகும். அவர்கள் முகம் கொடுக்கும் நாளாந்தப் பிரச்சினைகளிலிருந்து அவர்களை அந்நியப்படுத்த வேண்டும் என விரும்பினோம். ஒரு அமைதியான சூழலில் ஓய்வாக இருந்து மனம் திறந்து அளவளாவி ஒரு ஆரோக்கியமான கலந்தரையாடலில் பங்கு பெறவேண்டும் என விரும்பினோம்.

மாநாட்டில் பங்கு பற்றிய யாவரும் ஒரே இடத்தில் தங்கி, ஒன்றாக பழகி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், வெளியாருடைய குறிக்கீட்டை தவிர்ப்பதற்குமே சூரிச்சை தேர்ந்தெடுத்தோம். இன்றய சூழ்நிலையில் இப்படியானதொரு மாநாட்டை இலங்கையில் நடாத்துவது இயலாததொன்று.

வெளிநாட்டில் இம்மாநாட்டை ஏற்பாடு செய்தது நாம் அழைத்திருந்த விடயவிற்பன்னர்களின் (subject speacialists)உதவியை பெறவதற்கு இலகுவாக இருந்தது. வெளிநாட்டவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு விசா ஒழுங்கு செய்வதில் தடைகள் வர சாத்தியங்கள் இருந்தது.

6.அடுத்த நடவடிக்கையாக என்ன செய்யப் போகிறீர்கள்?

இத்தகைய நிகழ்வு இத்துடன் முடிந்துபோகும் என நான் எண்ணவில்லை. இந்த நிகழ்வினால் எய்தப்படும் பலன்களைப் பொறுத்து இது போன்ற ஆக்க பூர்வமான நிகழ்வுகள் இலங்கைவாழ் மக்களின் நலன்கருதி குறிப்பாக தமிழ்பேசும் மக்களின் நலன்கருதி அங்கு மேற்கொள்ளப்படும் அரசியல் முன்னெடுப்புகள் சமூகநிலைமைகளின் அடிப்படையில் தொடர்ந்தும் உங்கள் எல்லோரது பங்களிப்புடனும் தொடர்ந்தும் நடைபெற வேண்டும் என்பதே எமது விருப்பு. இதற்கு எல்லோர் உதவியும் எமக்கு தேவை.

கடந்த பல வருடங்களாக வன்முறை மேலோங்கி சமூக அமைப்புகளும் அரசியல் கட்டுமானங்களும் சிதைந்து சீரழிந்து விட்டன. சமூக அமைப்புக்கள் தமது வல்லமைகளை இழந்து அர்த்தமற்றவைகளாகி விட்டன. அவைகள் மக்களின் வாழ்வில் பயனற்றவையாக ஆக்கப்பட்டு விட்டன. ஜனநாயகமும் மனித உரிமைகளும் நசுக்கப்பட்டு விட்டன. தமிழ்பேசும் மக்களை அந்நியப்படுத்தி தான்தோன்றித் தனமாக மேற்கொள்ளப்படும் முறைமையை மாற்றி மக்களை மையப்படுத்தும் அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலையில் நாம் யாவரும் உள்ளோம்.

எனது மனதின் வேதனை ஒன்றை இங்கு நான் கூறியாக வேண்டும். இது எனது வேதனை மட்டுமல்ல இலங்கை வாழ்மக்களின் பால் மானசீகமாகவே அக்கறை கொண்டவர்களின் வேதனையும் தான். கடந்த 30 ஆண்டுகளின் அவலங்களுக்கும் தேக்கத்திற்கும் பின்னரும் எந்த அரசியல் நடவடிக்கைகள் இந்த இழிநிலைக்கு எமது நாட்டை இட்டுச் சென்றனவோ, அதே பாதையில்த்தான் இப்போதும் செல்வதுபோல் தெரிகிறது. அதே ஓட்டை விழுந்த கப்பலில்தான் அரசியல் பயணங்கள் தொடர்வதுபோல் தெரிகிறது. அப்படியானால் எம் இனிய மக்களுக்கு என்றுமே விமோசனம் இல்லையா? என கேட்கத் தோன்றுகிறது? இந்த நிலைமையை இந்த நிகழ்ச்சி ஓரளவாவது மாற்றியமைக்க வேண்டும். வாயளவில் அல்லாது செயலளவில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் வேண்டும். ஒரு புதிய பரிணாமம், ஒரு புதிய பாதை திறக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். போர் முடிவுற்ற சூழ்நிலையில் நாம் சரியாகப் பயணிக்க வேண்டும் என்பதே இலங்கை மக்கள் அனைவரது சுபீட்சத்திலும் அக்கறை கொண்டவர்களின் ஆதங்கமாகும்.

Zurich_TamilParys_Conferenceஒரு அரங்கிலேயே தமிழ்பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து மக்கள் நலன்பற்றிக் கலந்துரையாடியதும், பொதுத்திட்டங்களை முன்னெடுப்பது சம்பந்தமான சாத்தியக்கூறுகள் பற்றி பரிசீலித்ததுமான இந்நிகழ்ச்சி பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுள்ளது. தமிழ் பேசும் மக்களது கண்கள் மட்டுமல்ல மற்றய அரசியல் அமைப்புகள் உலக நாடுகள் ஆகியவற்றின் கண்களும் எம்பக்கம் திரும்பி இருக்கின்றன. இப்படியான பொறுப்புணர்வுடனும் சுமுகமாகவும் கண்ணியமாகவும் ஆக்பூர்வமான பேச்சுவார்ததைகளில் ஈடுபட்டு பொது வேலைத் திட்டங்களை அடைவதில் தான் எங்களது பெருமையும் திறமையும் மக்கள் மீதான கரிசனையும் தங்கியிருக்கின்றன.

இந்த நிகழ்வின் பலனாக தமிழ்பேசும் மக்களை மையப்படுத்திய அவர்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை எய்துவதற்கான அவர்களின் அவலங்களை தீர்ப்பதற்கான அவர்களின் இன்னல்களை நிவர்த்தி செய்வதற்கான ஜனநாயகம், மனிதாபிமானம், மனித உரிமைகளை உள்ளடக்கிய ஒரு பொது வேலைத்திட்டம் பற்றிய எண்ணங்கள் சுமுகமாகவும், பெருந்தன்மையுடனும், பரஸ்பர பரிந்துணர்வுடனும் உருவாக்கப்பட்டதால், அது அனைத்து தமிழ்பேசும் மக்களாலும் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்பது திண்ணம்.

அதுவே அனைத்து தமிழ்பேசும் மக்களின் இன்றய எதிர்பார்ப்பும் ஆகும். இந்நிகழ்வு பயன் உள்ளதாக அமைவதால் இது இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் புலம்பெயர்ந்த தமிழ் பேசும் மக்கள் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஆகியவற்றுக்கிடையேயான ஒரு பாலமாகவும் அமையும்.

நாம் அவசியமானதும் காத்திரமானதும் நிரந்தரமானதுமான நல்ல மாற்றங்களை மக்களிடையே கொண்டுவர விரும்பினோமானால் மக்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதற்கான வழிகளை சமைப்பதுடன், அவர்களையும் சமூகம் சம்பந்தமான செயற்பாடுகளில் ஈடுபட வைத்தல் வேண்டும். அதற்கான சந்தர்ப்பமும் இடைவெளியும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கு அவர்களது ஜனநாயக உரிமைகளையும் அவர்களுக்கு வேண்டிய சாதனங்களையும் வழங்கி தங்களது விவகாரங்கள் சம்பந்தமான விடயங்கள் பற்றிய முடிவுகளில் அவர்கள் பங்கு பற்றவும், தங்கள் சமூகம் முன்னேற வேண்டும் என உழைப்போரை ஊக்குவிப்பதற்கும் ஜனநாயகம் பலப்படுத்தப்பட வேண்டும். எம்மினத்தின் தலைவர்கள் என்ற வகையில் இம்மாநாட்டுக்கு வருகை தந்தவர்களால் தான் இதனை செய்ய முடியும். இதனை அடைவதற்கான சாவி அவர்கள் கையில் தான் இருக்கிறது. அச்சாவியை பயன்படுத்துவதற்கான சகல உதவிகளை செய்ய உதவுவதே எமது அடுத்த நடவடிக்கையாக இருக்கும்.

7.கடைசியாக உங்களைப் பற்றியும் TICயைப் பற்றியும் வந்த விமர்சனங்களைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

ஒரு மனிதனின் வளர்ச்சிக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் குறைகளை சுட்டிக்காட்டும் நண்பர்கள், சமூகப்பிரதிநிதிகள், தரமான ஊடகத்திறனாய்வு ஆகியவை அவசியமே. மாநாடு தொடங்குவதற்கு முன்பதான ஆரம்ப காலத்தில் ஊடகங்களில் சில எதிர்மறையான செய்திகள் வெளிவந்தன. அதற்கு காரணம் உண்டு. இம்மாநாட்டைப் பற்றித் தமக்கு அறிவித்தல் தந்திருக்க வேண்டும் என அவை நம்பின.

பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள எவரும் பிறருடைய கருத்துக்களுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால் வீணாண குற்றச்சாட்டு எது. தவறான தகவல்கள் எவை. வீண்வம்பு எது என பிரித்துணரக்கூடிய ஆற்றல் அவசியம். அத்துடன் ஒரு நிறுவனத்தை கோஸ்டி சேரா நிறுவனமாக நடாத்துவது கடினம். எப்போதும் சந்தேகங்களும் அழுத்தங்களும் இருந்து கொண்டே இருக்கும். இவற்றில் சிலருடைய ஆதங்கம் நியாயமானவையாக இருக்கலாம். மற்றயவை குறும்பு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுபவை. உண்மையான அக்கறை கொண்டோரை கண்டுபிடித்து அவர்களுக்கு விளக்கத்தை அளிக்க வேண்டியது எமது கடமை. சாதாரண மக்கள் புத்திசாலிகள். எதை எடுப்பது எதை விடுவது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எம் எல்லோரிலும் பார்க்க அவர்கள் அறிவு கூடியவர்கள்.

குற்றச்சாட்டுகளில் அநேகமானவை தாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதில் தெளிவில்லாத ‘கருத்துருவாக்கி’களினால்(opinion makers) மேற்கொள்ளப்படுபவை. அவர்கள் சொல்வதில் நல்லவற்றை எடுத்துக்கொண்டு மீதியை புறந்தள்ளலே சிறப்பான செயலாகும். இவை எல்லாம் நாம் நித்தமும் சந்திப்பவை. அத்துடன் இவை எம்மைத் தீங்கிலிருந்து தப்புவதற்கு உசார்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.

மீட்சி: நவம்பர் 2009, தமிழ் தகவல் நடுவத்தின் மாதாந்த வெளியீடு – இதழ் 13