வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் சர்வதேச தொழில் அமைப்புகளுடன் நேற்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே தலைமையில் வவுனியாவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் காமினி லொக்குகே, வடபகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மேலும் பல தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், ஊழியர் சேமலாப நிதியத்தைப் பெறுவதில் வட பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும். இதற்காக வவுனியாவில் தற்பொழுது நடமாடும் சேவையொன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் ஜகத் பாலசூரியவும் கலந்து கொண்டிருந்தார்.