யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை அகலமாக்கி காப்பற் வீதிகளாக மாற்றியமைக்கும் திட்டம் அடுத்த மாத இறுதிப் பகுதியில் ஆரம்பமாகுமென வீதி அகலமாக்கும் பணியை பொறுப்பேற்றிருக்கும் சீன ரயில்வே கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
தற்போது இந்நிறுவனம் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியை அகலமாக்கும் பணியில் எழுபது சதவீதமான பணியை நிறைவேற்றியுள்ளது. கால நிலை சீராக இருக்குமானால் இப்பணி அடுத்தமாத முற்பகுதியில் முடிவுபெறும் என அந்நிறுவன செயல்பாட்டு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.