முல்லைத்தீவு வெடிவிபத்தில் இரு சிறுவர் காயம்

முல்லைத்தீவில் இடம்பெற்ற வெடி விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுவர்கள் சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறிய சிலாவத்தை கிராமத்தில் இந்த சம்பவம் கடந்த திங்கட் கிழமை இடம்பெற்றுள்ளது.

வீடு வளவு குப்பைகளை சேகரித்த குடும்பப் பெண் அதனை பனை மரத்தின் கீழ் எரியூட்டியபோது வெடிவிபத்து நடைபெற்றுள்ளது. அப்போது சகோதரர்களான சிறுவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் முல்லைத்தீவு வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட அரசினர் பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *