கொரோனாவுக்கு எதிரான முதலாவது மருந்தை பதிவு செய்தது ரஷ்யா !

கொரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாகவும் தன் மகளுக்கு முதலில் செலுத்தியதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாகவும், அனைத்துக்கட்ட சோதனைகளும் வெற்றி அடைந்ததாகவும் ரஷ்யா தெரிவித்திருந்தது. மேலும், விரைவில் மருந்தை பதிவு செய்யவுள்ளதாகவும் கூறியிருந்தது. இந்நிலையில், தடுப்பு மருந்து குறித்து ஜனாதிபதி விளாடிமிர்புடின்  ரஷ்ய அமைச்சர்கள் மத்தியில் வீடியோ அழைப்பு மூலம்  பேசியுள்ளதை அடுத்து தகவல் காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்துள்ளது.

“இன்று காலை உலகில் முதல் முறையாக  கொரோனா வைரஸுக்கு எதிரான வாக்சின் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய மகள்களில் ஒருவருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது அவரும் இந்தச் சோதனையில் பங்கேற்றுள்ளார்.  என ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா ஏற்கெனவே கொரோனா தடுப்பு மருந்துக்காக பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டது. பெரிய அளவில் சில வாரங்களில் உற்பத்தி தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டுவாக்கில் பல லட்சம் டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ரஷ்யா கூறியிருந்தது.

பாதுகாப்பான வாக்சினுக்கான அனைத்து சோதனைக் கட்டங்களையும் நிறுவப்பட்ட வழிமுறைகளில் மேற்கொள்ளுமாறு உலகச் சுகாதார அமைப்பு கடந்த வாரம் ரஷ்யாவுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்த வாக்சினைத் தயாரித்தது மாஸ்கோவில் உள்ள கேமலேயா இன்ஸ்டிட்யூட் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *