வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தபுரம் வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் நித்தியானந்தன் பாசமலர் (35) என்பவர் தனக்குத்தானே மண்ணெண்னை ஊற்றி தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக அப்ககுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது
அண்மையில் இவரின் குடும்பத்தார் அவர்களது உறவினர் வீடான அனுராதபுரத்திற்கு சென்று திரும்பிய நிலையில் அவரின் குடும்பத்தினரை பொது சுகாதார பரிசோதகர்களால் பதின்நான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றில் பாதிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் வீட்டின் அறையில் கடந்த 28ம் திகதி தனக்குத்தானே மண்ணெண்னையை ஊற்றி தீ மூட்டிய நிலையில் சம்பவத்தை கண்ட அவரின் கணவர் தீயில் இருந்து மீட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 4ம் திகதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாகவும் சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.