“நினைவு கூர்வது என்ற போர்வையில் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பின் இறந்த பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு யாரும் அனுமதிக்க மாட்டார்கள்” – அமைச்சர் சரத் வீரசேகர ட்வீட் !

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழித்தமை தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்திருப்பதாவது,

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஒரு சமூகத்தின் பிரத்யேக சொத்து அல்ல. இது சட்டத்தை மதிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் சொந்தமானது.

அப்பாவி பொதுமக்களை நினைவு கூர்வது மற்றும் ஒற்றுமையை உருவாக்குவது என்ற போர்வையில் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பின் இறந்த பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு யாரும் அனுமதிக்க மாட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *