“காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ராஜபக்ச அரசு முடக்கக்கூடாது” – அமைச்சர் சரத்வீரசேகரவின் கருத்துக்கு ஹர்ஷ டி சில்வா எதிர்ப்பு !

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ராஜபக்ச அரசு முடக்கக்கூடாது” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் செயற்படுவதையும், நட்ட ஈடு வழங்கப்படுவதையும் விரும்பவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார். மேலும் இதன் மூலம் புலிகளுக்காக பணம் செலவழிக்கவும் அரசு தயாராகவில்லை என அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பில் ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் கூறியிருந்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறும் போது,

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் செயற்படுவதையும், நட்ட ஈடு வழங்கப்படுவதையும் விரும்பவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கையாகும்.

அதற்கு எதிர்ப்பு வெளியிடுவது ஒட்டுமொத்த நல்லிணக்க செயற்பாடுகளையும் எதிர்ப்பதற்கு ஒப்பானதாகும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *