“தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் அனைத்தும் சிதைந்துவிட்டது.” என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்.
பொரள்ளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கும் போது ,
‘நல்லாட்சி’ மற்றும் ‘செழிப்பு பார்வை’ என்ற கருப்பொருளுடன் எந்த அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தாலும் அது துரோகங்களை மட்டுமே செய்துள்ளது என்றும் இந்த பயணம் இப்போது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கவலைப்படுவதாகக் கூறிய அவர், நாடு எங்கு செல்கிறது என்பது குறித்து ஒரு பிரச்சினை எழுந்துள்ளது, யார் முடிவுகளை எடுக்கின்றார்கள், யார் நாட்டை ஆள்கின்றார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.
நாட்டைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த குழு, நாட்டை அழிவின் பாதையில் இழுத்துச் செல்வதாக வேதனையுடன் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் அனைத்தும் சிதைந்துவிட்டது. நாட்டில் மிகவும் ஆபத்தான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதுள்ள வளங்களை விற்பது எளிதானது ஆனால் வளர்ச்சி என்பது நாட்டின் அனைத்து வளங்களையும் விற்றுவிடுவது அல்ல. மேலும், இந்த நேரத்தில் எமது பிராந்தியத்தை மற்ற நாடுகளுக்கு தியாகம் செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
ஒரு அரசாங்கம் மக்களை மனதில் கொண்டே முடிவுகளை எடுக்க வேண்டும், பணக்கார, சக்திவாய்ந்த அல்லது வெளிநாட்டு சக்திகளின் பக்கத்திலிருந்து அல்ல.” என்றும் குறிப்பிட்டார்.