தேர்தலை முன்னிட்டு இரு மாகாணங்களில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும்

election_ballot_.jpgமத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலின் நிமித்தம் இரு மாகாணங்களையும் சேர்ந்த அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இரு தினங்களுக்கு மூடப்படுமென அரசாங்க தகவல் திணைக்களம் வியாழக்கிழமை அறிவித்திருக்கிறது.

மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு  சனிக்கிழமை 14 ஆம் திகதியும், 15 ஆம் திகதியும் மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களைச் சேர்ந்த அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படுமென கலால் திணைக்கள ஆணையாளர் டி.ஜி.எம்.வி. அப்புஆராச்சி அறிவித்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *