இலங்கையில் எகிறும் கொரோனா – ஒரே நாளில் பதிவான அதிகூடிய மரணங்கள் !

இலங்கையில் கொரோனா தொற்றினால் நேற்று (04) 94 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,821ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் பதிவான அதிகூடிய ஒருநாள் கொரோனா இறப்பாக இந்த எண்ணிக்கை பதிவாகி உள்ளது.

மேலும் நாட்டில் இன்று 1,885 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று இதுவரையில் 2,669 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 321, 424 ஆக அதிகரித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *