இலங்கையில் நிறைந்து போன பிணவறைகள் – நடைபாதையில் படுத்துக்கிடக்கும் கொரோனா தொற்றாளர்கள் – மக்களிடையே பெரும் பீதி !

இலங்கையில் கொரோனா தொற்றினால் நேற்று (04) 94 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா தொடர்பான அச்சம் மேலும் அதிகரித்துள்ள நிலையில் , கொரோனா தடுப்பு நிலையங்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

அந்த வகையில் இதுவரை இரத்தினபுரி, கராப்பிட்டிய, றாகம மற்றும் ஐ.டி.எச் மருத்துவமனைகள் அவசர நிலையை அறிவித்துள்ளன. மேலும் தற்போது பாதிக்கப்படுவோருக்கு ஆபத்தான அறிகுறிகள் உள்ளதுடன், நோயின் தாக்கமும் பாரதூரமாக உள்ளது.

Gallery

இதில், களுபோவில வைத்தியசாலையில் இடமின்றி வைத்தியசாலை நடைபாதையிலும், மக்கள் இடமின்றி தவிப்பதை காணக்கூடியதாகவும் உள்ளது.

அத்துடன், பிணவறைகளில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதையும் இந்த புகைப்படங்கள் வெளிக்காட்டுகின்றன.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *