இலங்கையில் காவல்துறை தடுப்புக்காவலின் கீழ் இடம்பெறும் சித்திரவதைகள் தொடர்பில் சிவிக்கஸ் மொனிட்டர் வெளிப்படுத்தியுள்ள ஆவணம் !

இலங்கையில் நியாயமான உரிமைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்தினால் முடக்கப்படல், அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படல், காவல்துறை தடுப்புக்காவலின் கீழ் இடம்பெறும் சித்திரவதைகள், பயங்கரவாத்தடைச்சட்டத்தின் முறையற்ற பிரயோகம் உள்ளடங்கலாக அண்மைக்காலத்தில் சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான இடைவெளியில் ஏற்பட்டுள்ள சுருக்கம் தொடர்பில் தென்னாபிரிக்காவின் ‘சிவிக்கஸ் மொனிட்டர்’ அமைப்பு விரிவாக ஆவணப்படுத்தியுள்ளது.

தென்னாபிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கை தளமாகக்கொண்டு இயங்கிவரும் ‘சிவிக்கஸ் மொனிட்டர்’ என்ற அமைப்பானது சர்வதேச ரீதியில் சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குக் காணப்படும் சுதந்திரம் தொடர்பான ஆய்வுகளை மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் அண்மைய காலத்தில் இலங்கையில் சிவில் சமூக செயற்பாடுகளின் நிலவரம் தொடர்பில் அவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *