இலங்கையில் நாளாந்தம் வீழ்ச்சி காணும் விவசாயத்துறை – அரசை சாடியுள்ள இலங்கை விவசாயிகள் சம்மேளனம் !

அரசாங்கத்தின் திட்டமில்லாத  முடிவுகளால் நாட்டின் விவசாயத்துறை நாளாந்தம் சரிந்து வருகிறது என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளரான நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர்,

உர நெருக்கடியால் விவசாயிகள் சோர்வடைந்துள்ளதால் நாடு முழுவதும் நெல் வயல்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. பெரும் போகம் வந்துவிட்டது, எனினும் விவசாயிகள் தயாராக இல்லை. விவசாய சமூகம் பெரும் எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அடுத்த வர்த்தமானி அறிவிப்பு உரத்துடன் தொடர்புடைய வர்த்தமானியாகும். வர்த்தமானி அறிவிப்பை மாற்றியமைத்ததால் ஏற்படும் சேதம் பேரழிவை ஏற்படுத்தும். மேலும், நாட்டின் விவசாயத் துறை மற்றும் உணவு உற்பத்திக்கான மிக மோசமான சேதத்திற்கு தற்போதைய நிர்வாகமே பொறுப்பாகும்.

விவசாய நிலங்களின் பரப்பளவு குறைந்து, விளைச்சலைக் குறைத்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளே இதற்கு அடிப்படை காரணமாகும். அத்துடன் தீர்மானங்களை அமுல்படுத்தும் முன்னர் அதனை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *