“நாம் ஆட்சியில் இருந்திருந்தால் கொரோனா உயிரிழப்பை தடுத்திருப்போம்.” – ஐக்கிய மக்கள் சக்தி

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் 15,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றினால் உயிரிழக்க இடமளித்திருக்காது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தம்மிக பாணி, சுதர்சன பாணி போன்றவற்றைக் காட்டி தடுப்பூசி போடுவதை தாமதப்படுத்திய அரசு, தடுப்பூசி போடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடுவது வெட்கக்கேடானது என்றும் அவர் கூறினார்.

தடுப்பூசி போடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வைபவம் நடத்துவது உலகிலேயே இலங்கை மட்டும்தான் என்றும் அவர் கூறினார்.

இன்று கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதாகவும், சமூகத்தில் கண்டறியப்பட்டதை விட கண்டறியப்படாத நோய்த்தொற்றுகள் அதிகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *