இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுகிறது நியுசிலாந்து !

இலங்கைக்கு உதவிகளை வழங்க நியூசிலாந்து அரசாங்கம் முன்வந்துள்ளது.

நியூசிலாந்து அரசு இலங்கைக்கு நிதியுதவி! - Eelanadu

இதற்கமைய, நாட்டிலுள்ள விவசாயிகள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக 5 இலட்சம் நியுசிலாந்து டொலர்களை வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இலங்கைக்கு இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனையா மஹுடா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் சிறுபோக பயிர்ச் செய்கைக்காக, 65 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *