அரசுக்கு எதிரான பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு பொலிஸார் கோரிக்கை!

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, விகாரமஹாதேவி பூங்காவிலிருந்து வார்ட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரையான பாதைகளுக்குள் நுழைய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இக்கோரிக்கையை நிராகரித்த கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டம் ஒழுங்கை மீறும் வகையில் செயற்பட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 95ஆவது பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *