தற்போதைய பொருளாதார நெருக்கடியால் நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறையால் குழந்தைகளின் போசாக்கு குறைபாடு வேகமாக அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ ஆலோசகரான வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
முன்னெடுக்கப்பட்ட ஆய்வுக்கு அமைய 53 குழந்தைகளில் பதினொரு குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாடுடன் இருப்பதாகவும், நான்கு குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 நிலைமைக்குப் பின்னரும், தற்போதைய பொருளாதார நெருக்கடியாலும் குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளது.
பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தங்களால் இயன்றவரை ஆரோக்கியமான உணவை வழங்குமாறும், அத்துடன் இலைக் காய்கறிகள் மற்றும் தானிய வகைகளை வழங்குமாறும் அவர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார்.