இன்னும் மூன்று மாதங்களில் கொழும்பு நகரில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க எச்சரித்துள்ளார்.
உணவு கையிருப்பு செப்டம்பர் மாதம் வரை மட்டுமே இருக்கும் என தெரிவித்துள்ள அவர், கொழும்பு மாநகர சபை விரைவில் நகருக்குள் 600 ஏக்கர் நிலத்தில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிடத் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.
நகரத்தில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை வளர்க்க ஊக்குவிக்கப்படுவதோடு, பயிர்களை வளர்ப்பதற்கான விவசாயத் திட்டத்தைத் தொடங்க கொழும்பு மாநகர சபை திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கொழும்பில் 350 மெட்ரிக் தொன் உணவு வீணடிக்கப்படுவதாகவும் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.