“மக்கள் போராட்டத்தை மீண்டும் உயிர் பெறச் செய்ய போகிறோம்.” – ஜே.வி.பி அறிவிப்பு !

அரசாங்கத்தை பதவி விலகச் செய்வதற்கான மக்களின் ஆர்ப்பாட்டங்களை புத்துயிர் பெறச் செய்வதற்கு தயாராகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்த அமைச்சரவைக்கு தொடர்ந்தும் நாட்டை நிர்வகிக்கும் உரிமை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களைப் பற்றி எவ்வித கவலையும் அற்ற அரசாங்கமே தற்போது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாவலராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் மீண்டும் அவர்களின் அரசியல் விளையாட்டுக்களை ஆரம்பித்துள்ளனர்.

எனவே மக்களின் ஆர்ப்பாட்டங்களை மீண்டும் புத்துயிர் பெறச் செய்து, அவர்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

இதற்கமை எதிர்வரும் 26ஆம் திகதி அநுராதபுரத்திலும், 27ஆம் திகதி குருணாகலிலும், 28ஆம் திகதி மாத்தறையிலும், 29ஆம் திகதி களுத்துறையிலும் ஜூலை முதலாம் திகதி அம்பலாந்தோட்டையிலும் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதே போன்று ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

,………..

மிக நீண்டகாலமாக ஏற்படுத்தப்பட்ட – செயற்படுத்தப்பட்ட  முறையற்ற பொருளாதாரக் கொள்கைகளே இன்று இலங்கை எதிர்கொள்ளும் எல்லா பொருளாதார நெருக்கடிக்கும் காரணம்.  போராட வேண்டுமாயின் எல்லோர்க்கும் எதிராக தான் போராட வேண்டும்.

ஜே.வி.பியும் எந்தவிதமான முன்யோஙனசனையுமின்றி மக்களை தூண்டிவிடுகின்ற அரசியலைத்தான் மேற்கொள்ள முயல்கிறதே தவிர மக்களுக்கான அரசியல் இல்லை. முடிந்தால் மே மாதம் ஏற்பட்ட போராட்டங்களில் கலந்துகொண்ட குற்றத்துக்காக ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கைதாகியுள்ளனர். அவர்களை விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த அரசியல் கட்சிகள் எல்லாமுமே வழமை போல் மக்களை தூண்டி விட்டு பிரச்சினைகளை பெரிதாக்கி அதில் அரசியல் செய்யும் மிருகத்தனமான அரசியலையே தொடர்ந்தும் செய்கின்றனர்.

ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. கடந்தகாலம் நாட்டை ஆண்டவர்ளும் தான் இந்த பழியை ஏற்க வேண்டியவர்கள். எல்லோரும் ஒரே பக்கத்தை நோக்கி கையை காட்டி விட்டு தங்களை நல்லவர்களாக்க முற்படும் போக்கே இன்றைய இலங்கை அரசியலில் தொடர்கிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *