எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹொரண, அங்குருவதொட்ட, படகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டீசல் பெறுவதற்காக சுமார் ஏழு நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசைகள் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.