எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கபட்டோருக்கான நீதி கேட்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்த்துக்கு அழைப்பு !

தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் 4 வருடங்களை எட்டுகின்றது. இதுவரையிலும் தமது பிள்ளைகளை தேடியபடி போராடி வந்த 72 க்கும் மேற்பட்ட தாய் தந்தையர் நீதியே இன்றி இறந்து போயுள்ளார்கள் . தொடர்ந்தும் கேட்பார் யாரும் இன்றி இவர்களின் போராட்டம் தொடர்கிறது .
இந்நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் தினத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையம் முன்பாகவும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தடியிலும் வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்க படவுள்ளது .
பாதிக்கப்பட்டவர்களாக தொடர்ந்தும் வலிகளோடு போராடி வரும் தாய்மாருக்கு வலு சேர்க்க இந்த போராட்டங்களில் இன ,மத ,அரசியல் பேதங்கள் கடந்து அனைவரும் பங்கெடுக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *